பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தமிழ் நூல் அறிமுகம்

அகநானூறு என்ற ஐந்தும் எட்டுத்தொகையில் உள்ளவை. புறப்பொருள் அமைதியை శీ2. G) LLJ త75) ఇ; புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற இரண்டு நூல்களும். பரிபாடல் என்பது இரு வகையான பொருள்களையும் பற்றிய பாடல்கள் அமைந்தது.

அந்தக் காலத்தில் அகவல் என்று சொல்லும் ஆசிரியப் பாக்களையே மிகுதியாகப் புலவர்கள் பாடி னார்கள். பத்துப் பாட்டிலுள்ள எல்லாப் பாடல்களும் ஆசிரியப்பாக்களே. - .

எட்டுத்தொகை நூல்களில் கலிப்பாக்களால் அமைந் தது கலித்தொகை: பரிபாடல்களால் அமைந்தமையால் பரிபாடல் என்ற பெயரை உடையதாக விளங்குகிறது. மற்றொரு நூல். மற்றவை யாவும் ஆசிரியப்பாவால் அமைந்தவையே. இந்த நூல்களில் உள்ள பாடல்கள் வெவ்வேறு புலவர்களால் பாடப்பெற்றவை.

அங்கங்கே வழங்கிய பழம் பாடல்களைச் சேர்த்து. வகைப்படுத்தித் தொகுத்து இந்த நூல்களை அமைத் தார்கள். ஒவ்வொரு நூலையும் இன்னார் தொகுத்தார்

என்ற குறிப்பு நமக்குக் கிடைக்கிறது.

பதினெண் கீழ்க்கணக்கு என்ற வரிசையில்.’ பதினெட்டு நூல்கள் அமைந்திருக்கின்றன. அவை சங்க காலத்துக்குப் பின்பு எழுந்தன என்று ஆராய்ச்சிக் காரர்கள் சொல்வார்கள். என்றாலும் பாட்டு, தொகை, கீழ்க்கணக்கு என்று இந்த மூன்று வரிசைகளையும் ஒன்றாகவே சேர்த்துச் சொல்வது ஒரு வழக்கம்.

கணக்கு என்பது நூலைக் குறிக்கும் சொல். சிறிய நூல் என்ற பொருளுடையது கீழ்க்கணக்கு என்பது. பத்துப் பாட்டையும் எட்டுத் தொகையையும் மேல் கணக்கு என்று ஒரு பழைய இலக்கண நூல் குறிக்கிறது.