பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 . தமிழ் நூல் அறிமுகம்

செய்யாமல் இருந்து கொண்டு முன்னோர் ஈட்டிய செல் வத்தைக் குறையச் செய்பவன் இம் மூவரும் முட்டாள் கள் ஆக்கத்தக்கவர்' என்கிறார். இப்படியே மேல் முறை யாளர் தொழில் இவை என்று மூன்றைச் சொல்லுவார் (2); சாகப் போகிறவன் காரியங்கள் என்று மூன்றைச் சேர்த்துரைப்பார் (4); அருந் துயரம் காட்டும் நெறி என்று மூன்று செய்கைகளைச் சொல்வார். (5)

மக்களுக்குக் கல்வி இன்றியமையாதது. கல்வியைக் கற்பிக்கிறவன் ஆசிரியன் ஆசிரியன் இருந்தால் சும்மா இருக்க மாட்டான்; மாணவர்களுக்குக் கல்வியைக் கற்பித்து வருவான். கல்வியில்லாத மக்கள் ஒரூரில் இருந் தால் அந்த ஊரில் நன்மையே உண்டாகாது. இப்படியே, அவைக் களத்தில் மூத்தோர்கள் இல்லாவிட்டால் அந்த அவைக்கள்த்தினால் எந்தப் பயனும் உண்டாகாது. உண்ணும் போது பிறருக்கும் பகுத்துக் கொடுத்து உண்பதை இல்லறத்தின் இன்றியமையாத பண்பாகச் சொல்வார்கள். அத்தகையவர்கள் அருகிருக்க வாழ்ந் தால் அவர்களால் நன்ைைம உண்டாகும். தம் வயிற்றையே நிரப்பிக் கொள்ளும் சுயநல வாதி அடுத்த வீட்டுக் காரனாக இருந்தால் நமக்கு என்ன நன்ம்ை: இந்த மூன்று கருத்தையும் இணைத்து நன்மை பயத்தல் இல் என்று சொல்லுகிறார்,

கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்

மூத்தோரை இல்லா அவைக்களனும் பாத்துண்ணாத் தன்மையி லாளர் அயல்இருப்பும் இம்மூன்றும்

. நாடகம் ஆடுகிறவனுக்கும் பாடத் தெரிந்திருக்க வேண்டும். குடிநீரின் பொருட்டுக் கிணறு வெட்டியவன் சாவா உடம்பாகிய புகழுடம்பை அடைவான். நமக்கு