பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 தமிழ் நூல் அறிமுகம்

பற்றி இந்நூலில் வரும் வரலாற்றுச் செய்திகள். பாரி. முல்லைக்குத் தேர் ஈந்ததும், அவன் மகள் ஒளவைக்குக் கீரை சமைத்து வழங்கியதும், பேகன் மயிலுக்குப் போர்வை அளித்ததுமாகிய சங்க காலத்து நிகழ்ச்சிகளை இவ்வாசிரியர் குறிப்பிடுகிறார். -

பழைய உரை இல்லாவிட்டால் இதில் உள்ள பல பாடல்களுக்குப் பொருள் விளங்குவது அரிது; அந்தப் பழங்காலத்தில் பழமொழிகளுக்குச் சிறப்பிடம் தந்து தங்கத்திலே மணி பதித்தாற்போல வெண்பாவில் பதித்து அமைத்த புலவரின் திறமையை நாம் பாராட்டத் தான் வேண்டும்.