84 தமிழ் நூல் அறிமுகம்
மைாகிலம் சேவடி ஆகத் துாகீர்
வளைகரல் பெளவம் உடுக்கை ஆக விசும்புணெய் ஆகத் திசைகை ஆகப் பசுங்கதிர் மதிபமொடு சுடர்கண் ஆக, இயன்ற எல்லாம் பயின்றுஅகத்து அடக்கிய வேத முதல்வன் என்ப, திதற விளங்கிய திகிரி யோனே.”
- (வளை நரல் பெளவம்-சங்கு முழங்கும் கடல். சுடர்சூரியன். என்ப-என்று சொல்லுவார்கள். திகிரியோன். சக்கரபாணி.1 -
ஆண்டவனுக்குத் தமிழில் கடவுள் என்ற பெயர் அமைந்திருக்கிறது, அது அவனுடைய இரண்டு இயல்பு களைக் குறிக்கும். அவன் எல்லாப் பொருளையும் கடந்து நிற்கிறான்; என்றாலும் எல்லாப் பொருள்களின் உள்ளும் இருக்கிறான். கட, உள் என்ற இரண்டு சொற்களும் இணைந்தது கடவுள் என்ற சொல். நற்றிணையின் கடவுள் வாழ்த்து, கடவுள் என்ற சொல்லுக்குப் பொருள் உரைப்பதுபோல அமைந்திருக்கிறது. அவன் இயன்ற எல்லாப் பொருளினூடும் பயின்று, சர்வாந்தர்யாமியாய் இருக்கிறான்; அவனே எல்லாவற்றையும் தன் ஆகத்தில் அட்க்கியும் இருக்கிறான். பயின்றதனால் உள்ளிருப்பது தெரியும்; அடக்கியதால் கடந்து நிற்பது தெரியும்.
இயன்ற எல்லாம் பயின்று அகத்திஅடக்கிய என்ற அடி இதனைப் புலப்படுத்துகிறது. -
நற்றிணையின் முதல் பாட்டு, காதலின் சிறப்பைச் சொல்லுகிறது. காதலி தன் காதஏனுக்கும் தனக்கும் உள்ள உறவாகிய காதலைப் பற்றிச் சொல்லுகிறாள், காதல் என்பது ஒரு பண்பு. அது நுட்பமானது.