இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
58 தமிழ் மணம் ஆம் என்று கூறலாம். காவியாதரிசத்தின் உரையாசிரியர் களும் தமிழ்நூல்களைக் குறிப்பிடுகின்றனர். எனவே, அணி யியல் தமிழ்ச் செய்யுள் வழக்கை ஒட்டி இயங்குவதனை அங்கே காணலாம். இவ்வாறு பொதுவாகக் கூறலாமே யன்றி. இக் கருத்தை விளக்கிக் கூற மேலும் ஆராய்ச்சிகள் பல நிகழவேண்டும். பிறமொழி நூல்களைத் தமிழ்நூல்களோடு ஒட்டி ஆராயும் ஆராய்ச்சியில் தமிழர் புகுதல்வேண்டும்.