பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

#GÉ

தமக்கு வலமாக அமையும் நிலையில் இருக்கவேண்டும் என்பது ஈண்டுக் குறிப்பிடப்பட்டு இருப்பதையும் உணர்தல் வேண்டும். மேலும் பல குறிப்புக்களை அறிய அவாவுவோர்க்கு பழநி சிவாசாரிய சுவாமிகள் வழி காட்டியாக விளங்குவார்கள்.

சொந்த அனுபவம் இல்லாவினும் குருமகா சந்நிதானத்தின் கருணுகடாrம் ஏற்பட்டு விட்டால் அனுபவத்திலும் இவ் உண்மைகளை நன்கு அறிந்து இறைவனை வழிபட்டு இன்ப நிலையைத் துய்ப்பற்குச் சாத்தியமாகும் எனச் சொல்லிக் கொண்டு, இவ்விடியேனையும் ஆட்கொள்வதற்கு முன்வந்த குருமகா சந்நிதானத்தின் பொன்னர் திருவடிக் கமலங்களில் சென்னி தாழவணங்கி, என்னுடைய இந்த உரையை முடித்துக் கொள்ளுகிறேன்.