பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181

。置葱露

வேண்டியதைப் பெறுதல், பிறஉடம்பில் புகுதல், மேம்பட் டிருத்தல், தன்வசம் ஆக்கல் என்பன மேற்கூறிய எட்டின் தன்மைகள். .

அரன் அகத்தியரைத் தென்னுடு அனுப்பல் 103. நடுவுகில் லாதிவ் வுலகம் சரிந்து

கெடுகின்ற தெம்பெரு மான்என்ன ஈசன் நடுவுள. அங்கி அகத்திய கீபோய் முடுகிய வையத்து முன்னிர் என்ருனே.

(இ - ள்) எம் தலைவ! இந்த உலகமானது சரிநிகர் இன்றி ஒரு பக்கம் தாழ்ந்து அழிகின்றதே என்று தேவர்கள் வேண்டிக் கொள்ள, இறைவன் அக்கினியுடைய அகத் தியனே நீ புறப்பட்டு உயர்ந்துள்ள தெற்குத் திசையைச் சென்று அடைவாயாக என்றனன்.

(அ-சொ) சரிந்து - தாழ்ந்து. பெருமான் - தலைவனே." அங்கி - நெருப்பு. முடுகிய - உயர்ந்துள்ள. வையத்து உலகில்; (தென்னடு). முன்னிர் - அட்ைக.

(விளக்கம்) அகத்தியர் சிவனை என்றும் தியானிப்பவர். சிவன் ஒளிப்பிழம்பு.ஒளிப் பிழம்பை உள்ளத்தில் கொண்டவர் அகத்தியர் ஆதலின், நடுவுள அங்கி அகத்திய என அவரை இறைவன் விளித்தனன். உலகம் ஒருபால் தாழ்ந்து ஒருபால் உயர்ந்தது என்பது ஒரு புராணக் கதை. இறைவன் தேவர் களின் வேண்டுகோட் கிணங்கி உமையை மணந்தனன். அம் மணத்தின் திருக்கோலக் காட்சியைக் காணத் தேவர், முனிவர் மற்றும் உள்ளோர் ஒருங்கே இமயத்தை அடைத்தனர். அதன் சுமைகாரணமாக வடபால் தாழ்ந்து, தென்பால் உயர்ந்தது அதனைச் சமன்படுத்த இறைவன் அகத்தியரைத் தென்னுட் டிற்கு அனுப்பின்ை. அகத்தியர் பொதிகை மலையில் வந்து தங்க உலகம் சரியாக நின்றது. இதுவே அப்புராணக் கதை.