பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197

(இ - ள்) புணர்ச்சியின் போது விந்து கருப்பையில் பாய்ந்த பின் தாய் தந்தையர்க்கு ஐந்து மாத்திரை அளவு பிராணவாயு ஒடினல், பிறக்கும் குழந்தை நூறு வயது வரையில் இருக்கும். நான்கு மாத்திரை அளவு ஓடினல் எண்பது வயது வரையில் வாழும். இவ்விதமாகப் பிரான் வாயுவைப் பகுத்து அறிந்து பாய்ச்சும் வாய்ப்பு, யோகப் பயிற்சியுடையவர்க்குத்தான் முடியும். -

(அ- சொ) அஞ்சு - ஐந்து மாத்திரை அளவுநேரம். பார் பூமி. வாயு - மூச்சு, (பிராண வாயு.)

(விளக்கம்) புணர்ச்சியில் மூச்சு வெளி வருதலே நன்கு காணலாம். அந்த மூச்சு வெளியீட்டு அளவு கொண்டு குழந் தையின் ஆயுளை நிர்ணயிக்கலாம் என்று இம்மந்திரம் கூறுகிறது. ஒரு மாத்திரை அளவு என்பது ஒருமுறை இயல் பாகக் கண்ணை இமைக்கும் நேரமாகும். கைப்பெருவிரல் நடுவிரல் இரண்டையும் இணைத்து நொடித்தலும் ஒரு மாத் திரைக்கு அளவாகும். இதனைச் சிட்டிகை போடுதல் என்பர்.

விந்து குறைவு மிகுதியால் விளையும் பிறப்புக்கள் 125. ஏற எதிர்க்கில் இறைஅவன் தான் ஆகும் மாற எதிர்க்கில் அரிஅவன் தான் ஆகும் நேர்ஒக்க வைக்கின் நிகர்போதத் தான் ஆகும் பேர்ஒத்த மைந்தனும் பேர்அர சாளுமே.

(இ - ள்) காதலர் இருவர் கூடும்போது தோன்றும் விந்து நடுநாடி வழியே நாத சத்தியை எதிர்த்துச் சென்ருல், அதன் வாயிலாகப் பிறக்கும் குழந்தை சிவவடி வாய்ப் பிறக்கும். நிதானமாக அந்த் விந்து நாதசத்திக்கு மேற்பட்டு எதிர்த்துச் சென்ருல், திருமால் வடிவில் பிள்ள்ை பிறக்கும். இரண்டும் சமமாகச் செல்லின் பிரமவடிவினன் ஆவான். இருவருக்கும் ஒத்து விள்ைந்த காமத்தால் பிறந்த மகன் அரசஞ்வான், * . . . . - * . . . . . . ... - سر