பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201

(விளக்கம்) பிராணவாயு ஆதவின் நல்வாயு என்றனர். குழறுதலாவது, ஒத்து இயங்காமல் ஏற்றத்தாழ்வாக இயங்குதல். இதல்ை மூச்சு விடும் நிலையை உணரவேண்டும் என்பதும், இங்ங்னம் அறியாது வேட்கை தோன்றிய போதெல்லாம் புணர்ந்தால் விந்து நாசமாகும் என்பதும் பெறப்பட்டன. 3.

பத்துமாத அளவில் குழந்தை பிறக்கும்

131. உருவம் வளர்ந்திடும் ஒண்திங்கள் பத்தில்

பருவம தாகவே பாரினில் வந்திடும்

மருவி வளர்ந்திடும் மாயையி ளுலே

அருவமதாவதிங் கார் அறி வாரே.

(இ) - ள்) ஒளி பொருந்திய பத்து மாதங்களில் தாய் வயிற்றில் குழந்தையின் வடிவம் வளரும். இந்தப் பத்து மாதகாலம் கழிந்ததும் பூமியில் வந்து பிறக்கும். பிறகு தாயால் வளர்க்கப் பெறும். வளரும் போது மாயையின் சார்பால் தன்னுரு தனக்கும் புலகைாமல் அறியாது இருப் பதை யார் அறிவார்? யாரும் அறிய முடியாது.

(அ - சொ) ஒண்திங்கள் . ஒளி பொருந்திய மாதங்கள். பார் - பூமி. மருவி - பொருந்தி. மாயை இருள்சார்பாம் மருள். அருவம் - கண்ணுக்குத் தெரியாமை.

(விளக்கம்) கரு முழு வளர்ச்சி அடையுங்காலம் பத்து மாதமாகும். இதனைத்தான் ஐயிரண்டு திங்களாய் அங்க மெலாம் நொந்து பெற்று' என மூதறிஞர் மொழிந்துள்ளனர். குழந்தைக்குத் தன்னுரு தெரியாது; தெரியாமைக்குக் காரணம் மாயை என்க.

மாயையின் கீழ்மையை உணர்த்தல் 132. இட்டார் அறிந்திலர் ஏற்றவர் கண்டிலர்

தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குனன் கெட்டேன் எம்மாயையின் கீழ்மைஎவ் வாறே.