பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

2병

யில் இருக்கும் கொக்குப்போல் வணங்கி இருப்பவர் ஊழிக் காலம் வரையில் அழியாமல் இருக்கலாம். -

(அ - சொ) கடைவாசல் - மூ லா த ார ம். காலை - பிராணனே. இடைவாசல் - நடுவாம். சுழுமுனே இருத்திதாரணை செய்து. மடை - நீர் மடை வந்தித்து - வணங்கி. ஊழி - பற்பல ஆண்டுகள் நிறைந்த காலம். - .

(விளக்கம்) பிரம்மாந்திரம் மேல் உள்ளது, அதனை நோக்க மூலாதாரம் கீழ் உள்ளது. ஆதலின் கடைவாசல் என்ருர், கட்டுதலாவது அடைத்தல். இங்குக் கூறப்பட்டவை எழுத்தால் விளக்கும் தரத்தவை அல்ல. ஞானசிரியன்வழி தியானப் பயிற்சி இன்னது என்பதை அறிந்து உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

தியானமே கடவுளைக் காணும் வழி 184. எண்ணு பிரத்தாண்டு யோகம் இருப்பினும் கண்ணுல் அமுதினேக் கண்டறி வார்.இல்லை உண்ணுடி யுள்ளே ஒளியுற நோக்கில்ை கண்ணுடி போலக் கலந்திருந் தானே. (இ - ள்) எண்ணுயிரம் வருடகாலம் யோகத்தில் இருந்தாலும் அமுதமாம் சிவனைக் கண்ணுரக் கண்டவர் இலர். ஆனல் உள்நாடியாகிய சுழுமுனே நாடியில் ஒளி வடிவாகத் தியானிக்கின் கண்ணுடியின் ஒளிபோலத் தியானிப்பவருடன் கலந்து இறைவன் இருப்பன்.

(அ சொ) அமுது - தேவாமிருதம் போன்ற இறைவர். (விளக்கம்) எண்ணுயிரம் என்பது பல ஆண்டுகள் என்னும் பொருள் தரும் நிலையில் உள்ளது. இறைவன் இன்ப வடிவினன். ஆதலின் அவனை அமுது என்றனர். யோக நிலையில் இருந்தால் மட்டும் போதாது. உள்நாட்டத்துடன் இருக்கவேண்டும் என்பது கூறப்படுகிறது. இதனுல் இறைவன் நினைவு இன்றி எதைச் செய்யினும் பயனில்லை என்றனர்.