பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

322

சரீரம், எந்தக் காலம் தொட்டு வந்துகொண்டிருக்கிறதோ என்று, அக்காலத்தைப் பற்றி நினைத்தால், இறைவன் திரு வருளைப் பெறலாம். ^:.

(அ 喙 சொ) ί εάν και

தி 懿

(விளக்கம்) பிறவியை எடுக்க எடுக்கப் பெருந்துன்பமே. ஆகவே அதை ஒழித்து பிறவா நிலையாகிய மோட்சம் அடைய இயலவேண்டும். நமக்கு இந்த உடல் எப்போது விக்கசி என்ற விசாரணை வந்தபோதே, இறைவன் திருவருளே அடைய

அருள் உபதேசங்கள்

302. போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள் ஆகின்ற போதும் அரன்அறி. வான்உளன் சாகின்ற போதும் தலைவன நாடுமின் ஆகின்ற அப்பொருள் அக்கரை ஆகுமே. (இ. ள்) அவர் அவர் செய்த பாவ புண்ணியங்கட்கு ஏற்பச் சீவான்மா போய்க் கொண்டிருக்கும். அவ்வான்மா பாவ புண்ணியங்களே அநுபவிக்கும்போதும், இறைவன் அதனை அறிந்து கொண்டே இருக்கின்றனன். ஆகவே, இறக்கின்ற போதும்கூட இறைவனே நாடுங்கள். அவ்வாறு நாடுகின்ற அந்தச் சீவான்மா மோட்சமாகிய அந்தக் கரையை அடையும். w - (உ - சொ) அப்பொருள் அந்த சீவான்மா. அரன் - சிவபெருமான், கரை - மோட்சமாகிய எல்லை.

(விளக்கம்) சிவான்மா பாவ புண்ணியங்களுக்கு ஏற்பப் பயனத் துய்க்கும். ஆகவே, இறக்கும்போதும் இறைவன் நினைவாகவே இறக்கவேண்டும். அப்படி இறந்தால், பிறவா நிலையை அடையலாம். அதாவது மோட்ச இன்பம் பெற 磁)fずLóe