பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

324

(இ - ள்) சிவபெருமானப் பல தேவர்கள் வழி பட்டனர். அப்பெருமான மட்டும் வழிபட்டால் போதாது. அப்பெருமான வழிபட்டுப் பலன்பெற வேண்டு மால்ை குருவையும் வழிபடுதல் வேண்டும். அப்போது தான் எல்லா நன்மைகளும் கைகூடும்.

(அ சொ) ஆம் ஆறு- ஆகும் பயன்கள்.

(விளக்கம்) இறைவனை வழிபட்டால் ஒரு பயனும் ஏற் படாது என்றதன் கருத்து, இறைவனுல் ஒன்றும் தர இயலாது என்பதன்று. அவன் திருவருளேப் பெறுவதற்குக் குருவின் திருவருளும் வேண்டும் என்பதாம். இதனை வற்புறுத்தவே அவ்வாறு கூறப்பட்டது.

உடம்பின் கில்

305. இரதம் உதிரம் இறைச்சிதோல் மேதை

மருவிய அத்தி வழும்பொடு மச்சை பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி உருவம்,அ லால் உடல் ஒன்றெனல் ஆமே.

(இ - ள்) சோற்றின் சத்து, இரத்தம், மாமிசம், தோல், கொழுப்பு, பொருந்திய எலும்பு, நிணம், மூளை, பரவிய இந்திரியம் ஆகிய இவற்றின் காரியத்தினுல் அமைந்தது. உடம்பின் உருவம் இவற்றைத் தவிர்த்து வேறு என்அ கூறமுடியுமோ? முடியாது. - -

(அ - சொ) இரதம் உணவின் சித்து. உதிரம் - இரத்தம். இறைச்சி மாமிசம். மேதை - நரம்பு, நினம். அத்தி - எலும்பு மருவிய கலந்த வழு ம்பு . தினம். மச்சை எலும்புக்குள் இருக்கும் பொருள். சுக்கிலம். இந்திரியம். உபாதி - காரியமாம். *...

விளக்கம் - உடம்பு இரத்தம் எலும்பு முதலியவற்ருல், அமைந்ததே அன்றி வேறு அன்று.