பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

93

அன்றி, அணுக்கள் அண்டங்களில் அடங்கா என்பதை, அணு அண்டம் சென்று அங்கு இடங்கொண்டதில்லை' என்ற அடியில் விளக்கினர் திருமூலர்.

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம் வாழ்கவே வாழ்க மெய்ஞ்ஞானத் தவன்தாள் வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.

தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.

- -திருமந்திரம் இன்னோரன்ன அரிய குறிப்புக்களையும் கருத்துக்களையும் கொண்ட பகுதியே இவ்வுபதேசப் பகுதி ஆகும். இத்தகைய அரிய கருத்துக்களைக் குருமகா சந்நிதானத்தின் திருவருள் துணைக்கொண்டு இந்த அளவு கூறினேன் என்று தெரிவித்துக் கொண்டு என் உரையினை முடித்துக் கொள்கிறேன்.