35
காலையில் எழுந்ததும், உச்சியில் வைத்து முழுக பிரமை பிடித்தவர்கள் தெளிவடைவார்கள், மூளைக் கோளாறுகள் அனைத்தும் நீங்கும். உஷ்ணத்தைப் போக்கிக் குளிர்ச்சியை உண்டாக்க இது தவிர வேறு தைலம் இல்லை.
அளவு: | குழந்தைகளுக்கு | 1 | டிஸ்பூன் | |
பள்ளிப் பிள்ளைகளுக்கு | 2 | “ | ||
பெரியவர்களுக்கு | 3 | “ |
மாந்தம் எதனால் வருகிறது?
செல்லம்: பாட்டி, குழந்தையைப் பார் பாட்டி. சும்மா அழுதுகொண்டே இருக்கிறது.
பாட்டி: மாந்தம் போல் இருக்கிறது. கவனிக்க வேண்டும்.
செல்லம்: பாட்டி மாந்தம் எதனால் வருகிறது?
பாட்டி: கணவனோடு கலந்திருந்து, பிறகு பால் கொடுப்பதால்தான் பிள்ளைகளுக்கு மாந்தம் வருகிறது?
செல்லம்: அது எப்படி?
பாட்டி: குழந்தைகளின் அணைப்பினால் பால் சுரப்பது போல கணவனது அணைப்பினால் காமநீர் சுரக்கிறது. அந்த நீர் பிள்ளைகளின் வயிற்றில் செரிப்பதில்லை.
செல்லம்: அதற்கு என்ன செய்ய வேண்டும்?
பாட்டி: குழந்தைகளுக்கு முன்னதாகவே பால் கொடுத்துவிட வேண்டும். பின்னே கொடுக்க நேர்ந்தால், அவ்விஷ நீரைக் கழுநீரிற் கறந்து ஊற்றிவிட்டு, பிறகு சிறிது நேரங்கழித்துப் பால் கொடுக்க வேண்டும்.
செல்லம்: குழந்தைகளுக்கு மாந்தம் வருகிறது இதனால்தானா பாட்டி.
பாட்டி: ஆம், பெரும்பாலும் இதனால்தான் வருகிறது.