பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 கவியரசர் முடியரசன் 0 1Ο7

போயிற் றடிமைஎனும் பொல்லா இருட்கூட்டம்; தூக்கம் கலைந்தொழியத் துள்ளிக் குதித்தெழுந்தோம்; ஏக்கம் அகன்றோட இன்பம் மிகப்பெற்றோம்; காந்தம் எனஈர்க்கும் காந்தி எனும்பெயரை ஏந்தும் சுடர்க்கதிரோன் இங்கெழுந்து வந்தனன்காண்; 50 தன்வாழ்வு நாடாமல் தான்பிறந்த தாயகத்தின் பொன்வாழ்வு காண்பதற்குப் புண்வாழ்வை ஏற்றவனை, தன்னையே நாட்டுக்குத் தந்துவிட்ட நல்லவனை, இன்னல்கள் அத்தனையும் ஏற்று நடந்தவனை, நோற்றுப் பிறந்தவனை நூறாண்டு சென்றபினும் ஏற்றிப் புகழ்கின்றோம்; எஞ்ஞான்றும் போற்றிடுவோம்; பூத்த மலர்முகமும் பொக்கைவாய்ப் புன்சிரிப்பும் பார்த்துக் கலங்கிவிட்டார் பாராண்ட வெள்ளையர்கள்; ஆடை குறைந்தாலும் ஆண்மை குறையாத மேடை முழக்கத்தால் மேல்நாட்டார் அஞ்சிவிட்டார்; 60 தீங்கிழைத்துப் பார்த்தாலும் தீரன் கலங்காமல் ஓங்கி வளருவதால் ஓலமிட்டார் ஆளவந்தார்; 'நாட்டுணர்ச்சி ஊட்டுகிறார்; நாட்டார் உரிமையினைக் கேட்டெழுச்சி கொண்டு கிளர்ச்சிகளும் செய்கின்றார்; கொத்தடிமை செய்கின்ற கூட்டம் கிளர்ந்தெழவே வித்திட்டார்' என்றுரைத்து வெள்ளையர்கள் அண்ணலைக் கூட்டுச் சிறைக்குள்ளே கூசா தடைத்துவைத்துப் பூட்டிக் களித்தார்கள்; புண்ணியனோ அஞ்சவில்லை; சிந்தனையை மாய்க்கச் சிறைக்கூடம் வல்லதென எந்தவர லாறும் எடுத்துரைக்கக் கேட்டதிலை: 70 வெட்டவெட்டப் பூச்செடிகள் மீண்டும் செழித்துவரும்: கொட்டிலுக்குள் வைத்த கொடிசெடிகள் சாளரத்துக் கம்பிவழி புக்குக் கதிரோனை நோக்கிவரும்;