பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 கவியரசர் முடியரசன் 0 41

இங்கவர்தாம் போற்றாராய் எள்ளிஎமை மோதவரின் போர்க்களிற்றின் காலடியில் புக்கழியும் வேய்முளைபோல் சேர்த்தழியச் செய்திடுவேன்; செங்கட் புலியொன்று 20 கண்டுயிலும் போழ்தத்துக் காணாமல் காலிடறிக் கொண்டதன்மேல் வீழுங் குருடன்தான் தப்புவனோ? தப்பா தழித்துத் தறுகண்மை காட்டிடுவேன்; இப்பார் எமக்குரிமை யாருக்கும் விட்டுவிடோம்' என்றுரைத்த வஞ்சினத்தான் எம்முன்னோன்; அவ்வேந்தன் நின்றுரைத்த வீரத்தை நெஞ்சிற் பதித்துள்ளோம்: தாய்க்குலத்தின் வீரத்தைச் சற்றே நினைந்துவிடின் போய்க்களத்தில் இன்றே புகுவோம் எனத்தோன்றும்; 'ஈன்று புறந்தருதல் எற்குத் தலைக்கடனாம் ஆன்ற சமர்முருக்கி ஆர்த்த களிறடக்கி 30 வென்று திரும்புதலே வீரமிக்க காளையர்க் கென்றுங் கடனாகும் என்றுரைத்தாள் ஒரன்னை மாற்றான் படையெடுத்து வந்தான் எனப்புகன்ற மாற்றம் செவிபுகுத மானத்தான் ஒரிளைஞன் வேலெடுத்தான் போர்தொடுத்தான் வீரச் சமர்க்களத்தில் காலொடித்தான் கையொடித்தான் கண்ணிமைக்கும் நேரத்தில் சாகடித்தான் பற்பலரைச் சாகாரை நாற்புறமும் போகடித்தான் ஆனாலும் தன்னுயிரைப் போக்கடித்தான்; 'வீரக் குலமகன்தான் வேலேந்திப் போனானே நேரிற் பொருதானோ? நேராரை வென்றானோ? 40 என்றவன்தாய் கேட்டாள்; இழிமகனாம் ஓர்பேதை துன்றமரில் வெந்காட்டித் தோற்று மடிந்தானென் றோர்பழியைக் கூறிவிட்டான் 'ஒடியவன் என்மகனா? ஊர்பழிக்கச் செய்தனனா? ஒன்னார்க்குத் தோற்றோடும் பாவி மகனுக்கோபால்கொடுத்தேன் என்றவன் தாய்

வெந் முதுகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/40&oldid=571647" இலிருந்து மீள்விக்கப்பட்டது