பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

வல்லிக்கண்ணன்

1911-ஆம் ஆண்டுவரை, சென்னை நகரிலேயே நடைபெற்றுக்கொண்டிருந்த சமாசக் கூட்டங்கள் 1912 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்ததாக அறியப்படுகிறது. அதற்குச் சுவாமிகள் எழுந்தருளியதாக அறியக்கூடவில்லை. காஞ்சி மணிமொழியார் (பி. செ. மாணிக்கவாசக முதலியார்) 71-ஆம் ஆண்டு பிறந்தநாள் மலரில், அவரது வாழ்க்கை வரலாற்றின் தொடக்கத்தில் காணப்படுவது இச்செய்தி.

அடுத்த 1913-ஆம் ஆண்டில் சமாசத்தின் எட்டாம் ஆண்டு நிறைவு விழா வேலூரில் நடைபெற்றது. தலைவராக நம் ஞானியார் சுவாமிகளே எழுந்தருளி 'சைவம்’, ‘சித்தாந்தம்' என இரு பிரிவாக்கிக்கொண்டு, தமக்கேயுரிய சிறந்த தலைமையுரை நிகழ்த்தியருளினார்கள். இவ்வுரை கேட்டோர் இவரே சமுதாயத் தொண்டர்; "இவரே சிவம் பெருக்கும் ஞானி" என்றெல்லாம் போற்றினார்.

அச்சமாசக் கூட்டத்தில் சுவாமிகளின் உரைகளைக் கேட்ட, சித்தூர் போர்டு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் C.M.பார்த்தசாரதி முதலியார் அவர்கள் ஹிந்து பத்திரிக்கைக்குச் செய்தி அனுப்பியிருந்தார். அது 13-1-1914 இதழில் வெளிவந்தது.

அடுத்த 1914 டிசம்பரில் சைவசித்த மகா சமாஜத்தின் ஒன்பதாமாண்டு விழா கூடலூர் துறைமுக நகரில் (கடலூர் ஒ.டி.) சிறப்புற நடைபெற்றது. அங்கு தலைமையேற்று விழா நிகழ்த்தியவர்கள் நம் அடிகளாரே யென்பதைக் குறிப்பிடத் தேவையில்லை. A.T. முத்துக்குமாரசாமி செட்டியார் சமாச விழா நடக்க ஆதரவளித்தவராவர்.

சமாசத்தின் தளர்ச்சி :

அதன் பின்னர், சமாசம் பெயரளவில் நிலைத்திருந்ததே யன்றி முன்போல் சிறப்பாக நடைபெறவில்லை. இங்ஙனம் 10 ஆண்டுகள் கழிந்தன எனத் துணியலாம். அப்போது நல்லசிவன் பிள்ளையவர்கள் தலைவராகவும், கி. குப்புசாமி முதலியாரவர்கள் செயலாளராகவும் அமர்ந்திருந்தனர். சித்தாந்தம் இதழ் வெளிவரவில்லை. ஆண்டு தோறும், சென்னை நகரிலேயே உள்ள சொற்பொழிவாளர்களைக் கொண்டு பொருட் செலவின்றிப் பெயரளவில் மாநாடு கூடி நடந்தது.

‘பொன்னைவிட மேன்மை பொருந்திய காலம் அவமே கழிகின்றதே! மக்களிடையே சமய வளர்ச்சித் தொண்டு சிறக்க நடைபெறவில்லையே!' என்று அடிகளார் வருந்திக் கூறியமை