பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

வல்லிக்கண்ணன்

நம் அடிகளாரிடம் பாடம் பயின்றோர் எண்ணிலடங்கார். சாத்தாத ஸ்ரீவைணவ குலத்து அம்மையார் ஒருவரும், கடலூர் கிறித்தவக் கன்னிமார் சிலரும் பாடம் பயின்றுள்ளார்கள்.

இராவ் பகதூர் திரு. இராசாபாதர் முதலியார் அவர்களின் அருமை மகளார் திருமதி. க. ர. ஆதிலட்சுமி அம்மையார் அவர்களும், அவர் தம் கணவனார் திரு. கே. அரங்கசாமி முதலியார் (Deputy Inspector of Local Boards) அவர்களும்பிறரும் பயின்றுள்ளார்கள்.

குடும்பமே அடிகளாருடன் தொடர்புகொண்டு பயின்றோரும் உண்டு. திருப்பாதிரிப்புலியூர் டாக்டர் பாப்பையா என்ற இராமலிங்கம் செட்டியார் அவர்கள் அவருள் ஒருவர். அவர் தம் மக்கள் திரு. சக்கரபாணி, திரு. வேல் முருகன் ஆகியோர் குழந்தைப் பருவத்திலிருந்தே அடிகளிடம் தொண்டு செய்து கல்வி பயின்றவர்கள். காஞ்சிபுரம் சிவசாமி தேசிகர் போன்றோரும் பலர்.

அடிகள் வீர சைவராயினும் சாதி சமய பேதம் இன்றியாவர்க்கும் கல்வி பயிற்றியதோடு யாவரையும் தொண்டராகவும் கொண்டிருந்த பெருமை அக்காலத்தில் அவரையே சாரும்.

பாடலேசுவரர் தரும பாடசாலை :

கி.பி. 1917-ல் உயர்திரு. தீ. சொ. நாகப்ப செட்டியார் என்பவரைக் கொண்டு பாடலேசுவரர் தரும பாடசாலை என்னும் பெயரால் ஒரு பள்ளியை நிறுவினார்கள்.

அப்பாடசாலை வளர்ந்தது. முதலில் அதன் ஆசிரியர் வண்டிப்பாளையம் திரு. ம. உருத்திரசாமி அய்யரவர்கள். பின் மாணவர் பலர் சேர்ந்தனர். படிப்பு இலவசம். சட்டை முதலியன அணிந்து கொண்டுதான் பள்ளிக்கு வர வேண்டு மென்ற கட்டுப்பாடு கிடையாது. ஒரே துண்டு மட்டுமே, அதுவும் குசேல ஆடையாக அணிந்து கொண்ட வந்து படித்த மாணவரும் இருந்தனர். காரணம் என்ன ? அப்பள்ளி வறியர்க்காகவே எழுந்ததாகும். மிக மிக வறியவர்களும் தம் பிள்ளைகளை ஆங்கனுப்பிப் படிக்கவைத்தனர். சுவாமிகள் முதன் முதலில் மாணவர்களுக்குப் பாட புத்தகங்களை இலவசமாகவேவழங்கினார்கள். பின்னர் மாணவர் பல்கினர். வகுப்புகளும் பலவாயின. ஆசிரியர் சிலரும் துணைக்கென அமர்த்தப் பெற்றனர்.

சுவாமிகள் அப்பள்ளியின் முன்னேற்றத்திற் கண்ணுங் கருத்துமாயிருப்பார்கள். தம் மடாலயத்தின் முன் கூடம், பின்