பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/163

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

வல்லிக்கண்ணன்


1937டிசம்பரில் வேலூரில் கூடிய சைவ சித்தாந்த மகா சமாச ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்கிய அடிகளார்க்குச் சுரநோய் வந்துற்றது. அது இரவில் மிகுதியுற்றும், பகலிற் குறைந்தும் காணப்பட்டது. அன்பர்கள் சுவாமிகளிடம் , கூட்டத்திற்குச் செல்ல வேண்டா எனவும் வற்புறுத்தினர். ஆனால், இறைவன் திருவருள் நமக்குத் துணை இருக்கும்; அவன் திருவருள் நம் கடனாற்றும் போதே உயிர் நீங்க வேண்டுமென்றிருந்தால் அப்படியே நேரட்டும்; தன் கடன் அடியேனையும்தாங்குதல், எம் கடன் பணிசெய்து கிடப்பதே: என்று விடையிறுத்திப் பணியில் முனைந்தார்கள். மூன்று நாட்களும் வாட்டிய வெப்புநோய் கூட்டம் முடிந்த பின்னர் எங்கொளித்ததோ வழக்கம் போலவே பணிகளில் ஈடுபட்டு வந்தனர் நம் அடிகளார்.

1939-ஆம் ஆண்டில், சைவ சித்தாந்த மகா சமாசச் செயலராக இருந்த திரு. ம. பாலசுப்பிரமணிய முதலியார் அவர்கள் கோவூர் (குன்றத்தூர் சேக்கிழார்) திருமேனிச் சுரர் கோயில் தருமகர்த்தராக இருந்தார். 1935ல் சுவாமிகள் எழுந்தருளியது போலவே மீண்டும் எழுந்தருள வேண்டு மென்ற அவரது அழைப்பிற்கிணங்கச் சுவாமிகள் ஆங்கு எழுந்தருளினார்கள். திருவிழாவின் அங்கமாகப் பல சொற்பொழிவுக ளாற்றினார்கள். அங்ஙனமே சென்னை சென்று பற்பல அன்பர் வேண்டுகோளை நிறைவேற்றுவான் தொடங்கிப் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள். அவற்றுள் ஐக்கிய நாணய சங்க ரிஜிஸ்டரார். திரு. கீ. தெய்வ சிகாமணி முதலியாரவர்களின் வேண்டுகோளின் வண்ணம் அவரது இருப்பிடத்தில் 'மெய்கண்டார்’ என்னும் பொருள்பற்றி ஆற்றிய சொற்பொழிவு கேட்டோர் யாவரையும், இத்தகைய சொற்பொழிவினை வேறு எவரிடமும் கேட்டலரி தெனத் துணிய வைத்தது. பற்பல இடங்களிலும் சொற்பொழிவுகளை நிகழ்த்தியருளிக் கொண்டிருந்த சுவாமிகள், கோடைக்காலம் காரணத்தாலும், மிகுதியான சொற்பொழிவுகளில் ஈடுபட்ட காரணத்தாலும் இடது துடையில் தோன்றிய ஓர்பெரிய கட்டியால் துன்புற்றனர். அது சத்திர சிகிச்சையால் நலம் பெற்றது. முருகன் திருவருள் சுவாமிகளை மீண்டும் தொண்டுகளில் ஈடுபடுத்தியது.

31.5.1941-ல் திருவோத்தூர், பரிதிபுரத்தில் நடைபெற்ற பாதுகவி மாணவர் கழகத்தின் பன்னிராண்டாம் ஆண்டு விழாத்