பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

வல்லிக்கண்ணன்


சுவாமிகள் அச்சியற்றிய சில நூல்கள்
1. திருப்பாதிரிப்புலியூர்ப்புராணம் 1897ல் வெளியிடப்பட்டது.
2. திருப்பாதிரிபுலியூர் தோத்திரக் சொத்து
3. அற்புதத் திருவந்தாதி
4. ஞானதேசிகமாலை
5. அவிநாசி நாதர் தோத்திரக் கொத்து
6. கந்தர்சட்டிச் சொற்பொழிவு ஆகியவைகள்.


அடிகளாரின் மாணவர்கள் இன்றும் சைவத்திலும் தமிழிலும் சிறந்தது விளங்கி வருகிறார்கள்.

முடிவுரை :

ஞானியார் சுவாமிகள் 19-20 நூற்றாண்டுகளில் வாழ்ந்த பெருந்தவயோகி. வீரசைவர். நற்றமிழர், நற்றொண்டினர். நாவீறு படைத்த சொற்பொழிவாளர். நல்ல வண்ணம் எல்லோரும் வாழப்பாடுபட்டவர். திருவாயால் சண்முக நாமத்தையே உச்சரித்தவர். கல்விக்கண் திறந்தவர்-அறச்சாலைகள். சபைகள் நிறுவினர் எல்லாவற்றையும் விட உயர்ந்த அனுபூதிமான். நாயன்மார்களோடு ஒப்ப நோக்கும் தகுதி வாய்ந்தவர். வாழ்க அடிகளார் நாமம் - தொடர்க அவர் தம் தொண்டு.

ஞானியார்சுவாமிகளின் வரலாற்று நூலை இனிய தமிழில் எழுதிய திருப்புகழ் இரத்தினம். புலவர் க.பா.வேல்முருகன் (ஸ்ரீலஸ்ரீ ஞானியார் சுவாமிகளின் மாணவர்) அவர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள் உரியனவாகுக. மற்றும் ஞானியார் சுவாமிகள் திருப்பெயரால் தமிழ்மன்றம் நிறுவி தமிழுக்கு அயராது பாடுபட்டு உழைத்து வரும் புலமைத் திருவாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவத்திரு ஞானியார் சுவாமிகளின் புகழுக்கும் தொண்டுகளுக்கும் ஏற்ப தலைநகரில் அல்லது தக்க இடத்தில் மணிமண்டபம், திருவுருவம், வாசகசாலை அமைத்திடல் வேண்டும்.