பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

வல்லிக்கண்ணன்

உண்மைகளைக் கண்டதும் எழுதி வைத்ததும் வியக்கத்தக்க காரியந்தான். அதைவிட வியக்கத்தக்கது, அந்த உண்மைகளைப் பல நூற்றாண்டுகளாகப் போற்றி வந்ததுதான்.

உண்மைகள் கண்ணால்க் காணக் கூடியவையல்ல; கையால்ப் பற்றி எடுக்கக் கூடியவையல்ல; உள்ளத்தில் நிற்பன. ஆகவே, அவைகள் மறைந்து போய்விடுவதற்கும் காரணம் உண்டு; மறைந்தும் போய்விட்டன. பெரியார்கள் சொல்லி வைத்த விஷயங்களைப் புறக்கணித்து விட்டு, வெறும் வார்த்தைகளையே சொல்லி வந்தார்கள் பிற்காலத்தவர். பெரியார்கள் பாடிய பாடல்களை அப்படியே பாடிக் கொண்டிருந்தால் போதும் என்று ஏற்பட்டு விட்டது. திருவாசகத்துக்கு உரை சொல்லக் கூடாது என்று சொல்லுவார்கள். பாராயணம் போதும், பொருள் தெரிய வேண்டியதில்லை என்று ஏற்பட்டு விட்டது. தெய்வப் பாடல் என்று சொல்லும் பாடல்களுக்குப் பின்னால், உண்மையனுபவமும் உணர்ச்சியும் இருக்கின்றன என்ற கொள்கை போய்விட்டது. உள்ளேயிருந்து என்றும் மங்காத பேரொளி வீசிக் கொண்டிருக்கிறது என்பதெல்லாம் கதையாய் முடிந்தது. விளக்கில்லை, வெளிச்சம் இல்லை, லாந்தல்க் கல்லும் சட்டமும் நிற்கிறது என்று ஆய்விட்டது.

இந்த நாஸ்திகத்தைப் பூர்த்தி பண்ண ஆங்கிலக் கல்வியும் தமிழ்நாட்டுக்குள் புகுந்துவிட்டது. சமய நூல்களில் ஒன்றுமேயில்லை. வார்த்தைகளை இப்படியும் அப்படியுமாக அளக்கிற காரியந்தான் வைதிகர்கள் பேசுகிற காரியமெல்லாம், என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் ஆங்கிலம் கற்றவர்கள். அவர்கள் பண்டிதர்களைக் கேள்வி கேட்டால் பதில் வருவது காரணகாரிய விளக்கம் அல்ல; வசை நாமாவளிதான்.

ஆங்கிலம் கற்றவர்களைக் குற்றம் சொல்ல இடமில்லை. அவர்களுக்கு உண்மைகளை எடுத்து விளக்குபவர்கள் பள்ளிக்கூடங்களிலும் இல்லை. வைதிகக் குழாங்களிலும் இல்லை. எல்லோருமாக, அயலூர் வண்டிமாடு கட்டவும் கடையாணியைச் சாக்கில்ச் சுற்றி வைக்கவுந்தான் ஏற்படுத்தியது கல்லும் சட்டமும், என்று தானம் வைத்துவிட்டார்கள். நம்பிக்கை பிறக்கமாட்டேன் என்று விட்டது கேட்டவர்களுக்கு.

தமிழுலகம் பொதுவாக இந்த நிலையில் இருந்தது. இருபது வருஷத்துக்குமுன். அப்படித்தான் இருந்தது திருநெல்வேலியும்.

சில நண்பர்கள் திருச்செந்தூருக்குப் போய் விட்டுத் திருநெல்வேலிக்குத் திரும்பி வந்தார்கள். வந்தவர்கள் வடக்கே