பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

தமிழ் வளர்த்த நகரங்கள்

இனித்த முடைய எடுத்தபொம்
பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ
தேயிந்த மாநிலத்தே’

என்பது நாவுக்கரசரின் தேவாரமாகும்.

தில்லையில் சுந்தரர்

சைவசமய குரவர் நால்வருள் இறுதியாகத் தில்லையைக் கண்டவர் சுந்தரர். இவர் தில்லைப் பொன்னம்பலத்தின் முன்னர்ச் சென்று நின்று திருக்கூத்தன் கோலத்தைக் கண்டார். உடனே இவருக்கு ஐந்து புலன்களின் வழியாகப் பிரிந்து காணும் ஐந்து அறிவுகளும் கண்ணிந்திரியம் ஒன்றேயாகக் கொள்ளை கொண்டன. ஏனைய நான்கு அறிவுகளும் செயலற்றன. இவற்றை உள்ளிருந்து செலுத்தும் உட்கருவிகளாகிய அந்தக்கரணங்கள் நான்கனுள் சிங்தை ஒன்றே தொழில் செய்தது. ஏனைய மூன்றும் செயலற்றன.

இவற்றை ஊக்கி நிற்கும் மூன்று குணங்களுள் சாத்துவிகம் ஒன்றுமே தொழில் செய்தது. ஏனைய இரண்டும் ஒடுங்கிவிட்டன. இவ்வாறு கூத்தனது காட்சியாகிய எல்லையில்லாத. பேரின்ப வெள்ளத்தில் இணையற்ற மகிழ்ச்சியால் மலர்ந்து நின்றார். பின்னர், “பெருமானே! நின் திருகடம் கும்பிடப்பெற்ற பெரும் பேற்றால் எளியேனுக்கு மண்ணிலே வந்த இந்தப் பிறவியே தூயதும் இன்பம் மேயதும் ஆயிற்று” என்று முறையிட்டார். இவ்வாறு சுந்தரர் தில்லையை வழிபட்ட சிறப்பினைச் சேக்கிழார் திருவாக்கால் அறியலாம்.