பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புராணம் புகழும் நெல்லை

63


தாருகவனத்தில் கங்காளர்

இந் நெல்லைப் பகுதியே முன்னை நாளில் தாருக வனமாக விளங்கிற்றாம். இங்கு ஏழு முனிவர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் நெடுந்தவத்தால் சிறந்து விளங்கிய பெருமுனிவர்கள். அவர்கள் தாருகவன முனிவர்கள் என்று தலைக்கொண்டு போற்றப்பெற்றனர். அவர்கள் தங்கள் தவச்செருக்கால் சிவபெருமானையும் மதிப்பதில்லை. அம் முனிவர்களின் பத்தினியரும் அத்தகைய செருக்குடன் இருந்தனர். அவர்களுடைய தவச்செருக்கை யடக்கி நல்லறிவு கொளுத்த வேண்டுமெனச் சிவபெருமான் நினைத்தருளினான். கங்காள வடிவங் தாங்கிக் காட்டிடையே புகுந்தான். பிச்சாடனக் கோலத்துடன் தாருகவன முனிவர் பத்தினியரின் சித்தத்தைப் பேதுறுத்தினான். அவர்கள் அறிவிழந்து காமத்தால் பிச்சாடனக் கோலங் தாங்கிய பெம்மானைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் தனித் தனியே பிச்சாடனருடன் கூடிக் குலவிக் குழந்தையும் ஈன்றெடுத்தனர். இச் செயலைக் கண்டு தாருகவன முனிவர்கள் சிவபெருமான்மீது தணியாத சினம் கொண்டனர். அப் பெருமானை அழித்துவிடக் கொடிய வேள்விகள் பல செய்தனர். அவர்கள் ஆற்றிய தவத்தாலும் வேள்வியாலும் சிவபெருமான ஒன்றும் செய்ய முடியவில்லை. பின்னர், அவர்கள் தம் செருக் கொழிந்து, அறியாமையை உணர்ந்து, பெருமான் திருவடி பணிந்தனர்.

நெல்லுக்கு வேலியமைத்த வேய்முத்தர்

மூங்கிற் காட்டில் முளைத்த வேய்முத்தருக்கு நாள் தோறும் தொண்டு செய்யும் ஆதிசைவ அந்தணாளன்