பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புராணம் புகழும் நெல்லை

65


நெல்லைப் பகுதியிலிருந்த வேணுவனத்தின் இடையே கம்பைநதியென ஓராறு ஓடியது. அவ்வாற்றின் கரையில் உமையம்மை சிவபெருமானை அடையத் தவங்கிடந்தார். காஞ்சிமாநகரில் கம்பை நதிக் கரையில் கடுத்தவம் ஆற்றிய காமக்கோட்டத்து காயகியாரைப் போல, இப் பகுதியிலும் உமையம்மை தவம்புரிந்த காரணத்தால் இந் நகருக்குத் தென்காஞ்சியெனப் பெயர் வழங்கலாயிற்று என்பர். சிவனேயடையத் தவம்புரிந்த உமையம் மைக்குப் பெருமான் திருக்கோலம் காட்டித் திருமணம் புரிந்துகொண்டார். அத்திருமணக்கோலத்தை அகத்தியர் முதலான முனிவர்கள் கண்டு தரிசித்துக் கழிபேருவகை யடைந்தனர். அதனாலேயே இந்நகரில் ஐப்பசித் திங்களில் காந்திமதியம்மை திருமணவிழாப் பெருமுழக்குடன் நடைபெறுவதாகும்.

த. வ. ந.-5