பக்கம்:தமிழ் வளர்ந்த கதை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பதிப்புரை


வில்லுப்பாட்டு தமிழகச் சிற்றூர்களில் இந்நாளிலும் பாராட்டப்பெறும் நல்லிசையாகும். பல்வகைக் கதைகள் வில்லுப்பாட்டாகப் பாடப்பெற்று வருகின்றன. பெரும்பாலும் வில்லிசை சிறுதெய்வ வழிபாட்டுக் காலங்களிலேயே பெரிதும் பயின்று வந்தமையால் கதைகளும் சிறு தெய்வக் கதைகளாகவே விளங்கின. வில்லிசையைத் தமிழ்மக்கள் அனைவரும் கேட்டுப் பயன் எய்தப் புத்தம் புதுக் கருத்துகளுடன் உணர்வூட்டும் வரலாறுகளும் அவ்விசைப் பாடல்களாக அமைக்கப்பெறல் வேண்டும். அத்துறையில், புலவர் . நவநீதகிருட்டிணனாரின் முதன் முயற்சியாகிய இத்தமிழ் வளர்ந்த கதை தமிழ் உணர்வு பெருக்கும் வகையில் கழக வழி வெளிவருகின்றது. தமிழகம் விருப்புடன் ஏற்று மகிழும் என நம்புகின்றோம்.


சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.