பக்கம்:தமிழ் வளர்ந்த கதை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் ஓங்குக!

தமிழ் வளர்ந்த கதை

——:○:——

கடவுள் வணக்கம்

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே!
கன்னித் தமிழ்வளர்ந்த கதையினைச் சொல்லுதற்கு
இன்னருளைத் தந்தெனக்கு முன்னின்று காத்தருள்வாய்!

தமிழ்த்தாய் வணக்கம்

கன்னலோ தேனோ கற்கண்டோ நற்கனியோ
இன்னமுதோ என்ன இனிக்கும் தமிழ்த்தாயே
நீவளர்ந்த நற்கதையை நீள்நிலத்தில் நான்சொல்ல
நாநிறைந்து பாவளர நல்லருள்நீ செய்திடுவாய்!

வசனம்

ஆகா ! தேனோ ! பாலோ ! கற்கண்டோ ! தெவிட்டாத தெள்ளமுதோ ! கற்பவர் கேட்பவர் கருத்தெல்லாம் இனித்திடும் இன்பத்தமிழ் நம் தாய்மொழி. அது பிறந்து வளர்ந்த பெருங்கதையைச் சிறியேனால் செப்ப முடியுமோ ? ஆயிரம் நாப்படைத்த ஆதிசேடனாலும் அறைவ