பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/6

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

. முன்னுரை

    எந் தந்தையார் அப்போதைக் கப்போது எழுதி, பல பத்திரிகைகளின்  மூலமாய் வெளிவிடுத்த பல தமிழ் வியாசங்களை பொருங்கு சேர்த்து, "தமிழ் வியாசங்கள்" என்ற தலைப்பின்கீழ் வெளிவிடவேண்டுமென்ற பேசவா வெகு நாட்களாக எனக்கு இருந்து வந்தது. அப் போவா கைகூடும் காலம் இப்போது, வாய்த்ததைப்பற்றி யான் பெரிதும் மனமுவக்கின்றேன்.
    இவ்வியாசங்கள் பல பெரியோர்கள் கூறிய முறைப்படியே வகுக்கப் பட்டுள்ளன. அதுபற்றி அன்னாருக்கு என்னுடைய மன்மார்ந்த வந்தனத்தைச் செலுத்துகின்றேன். மற்றும் இதனைத் தங்கள் பத்திரிகைகளினின்றும் எடுத்துப் பிரசுரிக்க உத்தரவளித்த - பத்திராசிரியரவர்களுக்கும், எக்தக்கை யாரது நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் என் நன்றியைச் செலுத்துகின்றேன். 
    இன்னும் எந்தந்தையார் எழுதிய வியாசங்கள் அநேகம் உள்ளதென அறிகிறேன். அவ்வாறு உள்ளதன் பிரதியாரிடமாவது இருப்பின் அதனே எனக்குத் தந்து உதவும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
   இப் புத்தகத்திற்கு ஆங்கில முக்வுரையெழுதி உதவிய மகா-ா-ாது- எஸ். எஸ். சூரியநாராயண சாஸ்திரியார், எம். ஏ., பி. எஸ்வலி, அவர்கட்கும், தமிழ் முகவுரை யெழுதியும், மற்றும் பிழைதிருத்தியும் உதவிய மகா-ா-பூர் வே. முத்துசாமி ஐயர், எம்.ஏ., எல்.டி., அவர்கட்கும் என் மனமார்ந்த வக்தனம் செலுத்துகின்றேன்.
                                 இங்ங்னம்,
                          வி. கு. சுவாமிநாதன்.

1-10-35 மதுரை.