திருமால் புகழ் 43;
தாலும் உணராவிட்டாலும் அவன் இருப்பது உண்மை, புழுக்கத்தினுல், “காற்று இல்லை' என்று சொன்னலும்
காற்று இருப்பதுபோல, அறியாமையால், ‘இறைவன்
இல்லை' என்று சொன்னலும் இறைவன் இல்லாமல்
போவதில்லை; இருக்கிருன். அவதார காலங்களில் வாழ் வாருக்கும் அன்புடையாருக்கும் வெளிப்பட்டு அருள் செய்ய வருகிருன்; ஏனையோருக்குத் தெரியாமல் ஒடுங்கி நிற்கிருன். இந்த இரண்டு இயல்புகளையும் காற்றினிடம்
பார்க்கலாம். அதனிடம் வருதலும் ஒடுக்கமும் உள. அவை: இறைவனுடைய இயல்புகளில் ஒரு கூறே ஆகும்.
30. கின், தோற்றமும் அகலமும் நீரின் உள:
கின், உருவமும் ஒலியும் ஆகாயத்து உள்: கின், வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள. 0 நின்னுடைய தோற்றமும் பரப்பும் நீரில் உள்ளன: நின்னுடைய உருவமும் ஒலியும் ஆகாயத்தில் உள்ளன: நின் வருகையும் வாராமல் ஒடுங்கி நிற்றலும் காற்றில் உள்ளன.
தோற்றம் - காணப்படும் காட்சி ; வெளிப்படுதல்: என்பர் பரிமேலழகர். அகலம் . விரிவு, பெருமை’ (பரிமேலழகர்.) உருவம் - ஞானக்கண்ணுல் காணப்படும் உருவம். ஒலி சொல்; ஆகாயத்துள என்ருர், அதன் பண்பாகலின். வருதல் - அவதரித்தல். ஒடுக்கம்மீண்டு சென்று அடங்குதல்’ என்பர் பரிமேலழகர். மருத்துகாற்று. 0
எல்லாம்
இப்படியே இன்னும் சொல்லிக்கொண்டு போக
லாம். தீயின் தன்மையாகிய வெப்பம் இறைவனுடைய
இயல்பை கினைப்பூட்டுகிறது. மலேயின் உயர்வும் கடலின் ஆழமும் மரத்தின் பசுமையும் கல்லின் திண்மையும் மலரின்