பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வையை 79

யும், பேக்கையும், தாபத்துககு வேண்டிய நெருப்பையும் எங்கிச் செல்வார்கள். அதுமட்டுமா? வையையாற்றில் புனல் விளையாட்டுப் புரியப் பலர் செல்வார்கள். தமக்கு இன்பக்தை உண்டாக்கும் காதலர்களோடு புனலில் விளை யாடுவது மிக்க இன்பத்தைக் கரும். அதற்காகக் காலை யிலே எழுந்து தம்மை அலங்கரித்துக்கொண்டு மகளிர் புறப்படுவார்கள். அவர்கள் தம் கையிலே மேலே சொன்ன பொருள்களே எங்கிக்கொண்டு செல்வார்கள்:

உண்ணும் ைேரயும் உணவை உண்டாக்கும் நீரை யும் கந்து, மாசு தீர ஆடும் தும் புனலயும் வழங்குவ கல்ை வையையாறு பூசை செய்வதற்குரியது. அந்த ரோல் அறம் மலியும்; பொருள் மலியும்; வீட்டு நெறிக்குரிய தூய்மை மலியும். அவற்ருேடு காதலரும் காதலியரும் ஒன்றுபட்டு ர்ே விளையாட்டு கடத்தும் இன்பச் செயல் களுக்கும் வையையின் புது வெள்ளம் துணையாக இருக் கின்றது.

இவ்வாறு காகலுடையவர்களைக் காலையிலே அலங் காரம் செய்து கொள்ளும்படியாகச் செய்யும் வகையிலே வையை புது வெள்ளத்துடன் வந்தது.

மழை பெய்து வையையில் வெள்ளம் வருகிறது. அதன்கண் விளையாடும் பொருட்டு மகளிரும் மைந்தரும் கோலம் புனைந்துகொள்ளப் போகிருர்கள். அவர்கள் ர்ே விளையாட்டு நிகழ்த்தும் பொழுது தங்கள் தங்கள் காதலரோடு சேர்ந்து ஆடுவதல்ை அவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாகும். உடம்பு பூரித்துப் போகும். தோளிலே அணிந்திருந்த தோள் வளைக ளாகிய வாகுவலயங்கள் அந்தப் பூரிப்பினலே இறுகிப் போகும். அவை இறுகும்போது அவற்றை முன்