பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தமிழ் வையை

பரத்தை; இவள் சேரிப் பரத்தையின் மகள். அவ்வாறு இருந்த காதற் பரத்தையின் மகளாய், 0ನಾ? ஒனறை யன்றி மற்ற எல்லா கலங்களையும் பெறும் ஒருத்தியைக் காமக் கிழத்தி என்றும் இற்பரத்தை யென்றும் சொல் வார்கள். நாள்தோறும் அமுகத்தையே துகளும் ஒருவன் அது தெவிட்டில்ை சிறிது புளிப்புச் சுவையையும் துகர்வது போலத் தலைவன் தன் மனேவியோடு இன்புற்று வாழும் காலத்தில் இடையே இத்தகையவர்களோடு அளவளாவு வது வழககம.

பரத்தையரோடு அளவளாவுவது தெரிந்தால் தலை விக்கு ஊடல் உண்டாகும். இங்கே முதல் நாள் இற்பரத்தையோடு ரோடின்ை என்ற செய்தியை உணர்ந்த காதற் பரத்தை கலவனிடம் ஊடலுடைய வளாக இருந்தாள். தலைவன் தளிரைக் கொய்து கொண்டு வந்து அவளுக்குக் கையுறையாகக் காட்டி வையையில் புனல் வந்த செய்தியை மேலே உள்ளவாறு சொன்னன்.

காதலர்கள் ஒன்றுபட்டு விளையாடும் விளயாட்டைப் பற்றி அவன் கூறக் கூற அவளுக்குக் கோபம் மிகுதியா யிற்று. கோபத்தோடு பேசலாளுள் :

காதற் பரத்தை : நான் பழையவள். பழைய பொருளிடம் சலிப்பு உண்டாவதும் புதிய பொருளிடம் மோகம் உண்டாவதும் உலக இயற்கை. இதை என்னிடம் என் கொண்டுவந்து தருகிருய்? என்றும் மாமு.க புதுமையை உடையவரும் கின்னல் விரும்பப்படுவாருமாகிய மகளிருக் காக அல்லவா இதை 8 கொய்தாய்: அப்படி. இருக்க, அவர்களிடம் அளிக்காமல் என்னிடம் ஏன் கொண்டு வந்தாய்?