பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

132 அந்த நண்பர்கள், பெரியாரிடம், தி.மு.க. பற்றி, மிக மிகத் தவறான கணக்குகளைத் தருகிறார்கள் - உண்மையை மறைக்கிறார்கள். அவர்களின் கணக்குப்படி, திராவிட முன்னேற்றக் கழகம், ஒரு அரை டஜன் சிறுவர்கள் கொண்டது!! இராயபுரத்தில் எங்கோ ஒரு இடத்திலே கிடப்பது அது, கரைந்து, கலைந்து, குலைந்து, நலிந்து, மெலிந்து, மாண்டுபோகும் என்று 'நல்வாக்கு' கொடுத்தவண்ணம் இருக்கிறார்கள் -ஆறு ஆண்டுகளாக!! அதிலிருந்து, அவர் விலகினார், இவர் விலகப் போகிறார் - என்று கரடி வீட்டு, பெரியாரைக் களிப்படையச் செய்கிறார்கள். ‘அதுகளுக்குச் செல்வாக்கே இல்லை! என்கிறீர்களே, மாநாடு நடத்துகிறார்கள், ஆயிரம் பத்தாயிரம் என்று மிச்சம் காட்டுகிறார்களே, எப்படி முடிகிறது?' என்று பெரியார் கேட் கிறார். அத்துடன் விடுகிறாரா, நீங்களும் பிரமாதமாக என்னிடம் நம்பிக்கை ஊட்டிவிட்டு, மாநாடு போடு கிறீர்கள், மிச்சம் என்ன என்றால், சொச்சம் தரவேண்டி இருக்கிறது என்கிறீர்கள், பந்தல்காரனுக்கும் பாண்டு வாத் யககாரனுக்கும்!-என்று கேட்கிறார். என்ன செய்வார்கள், என்ன சொல்லித் தப்பித்துக்கொள்வார்கள். ‘"அது...அவர்கள் சினிமாக்காரரை, நாடகக்காரரைக் காட்டிப் பணம் திரட்டுகிறார்கள் ...... அதனாலே தான் ......... என்று இழுத்துப் பேசுகிறார்கள் -அவர் அவர்களைக் கோபத் துடன் பார்த்துவிட்டுக் கனைத்துக் காட்டுகிறார்-பொருள் உண்டு அதற்கு, நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்கள் குதிரை மீதமர்ந்தல்லவா, மாநாடுகளின் ஊர்வலம் நடக் கிறது - அது அவருக்குத் தெரியாதா-சினிமாக்காரர் கலந்து கொள்வதால், தி.மு.க. ஜொலிக்கிறது என்றால், சினிமாக் காரர்களே கண்டு பாராட்டும் நடிகவேள் இருக்கும் இடத் துக்கு அல்லவா, ஆதரவு பெருகி வழிய வேண்டும்! இதுபோலவே, ஒவ்வோர் உண்மையும் அவரிடமிருந்து மறைக்கப்படுகிறது. வந்தால் ஜனவரியோடு ஒழிந்துவிடுவார்கள்! மார்ச் மாண்டுபோவார்கள். ஜூனில் ஜன்னி பிறந்துவிடும் - ஜூலையில் ஒழிந்துபோவார்கள்-ஆகஸ்டு அவர்களை அழித்தே போடும்- என்று சூனியக்காரன்,கோழி முட்டைக்கு மஞ்சள் குங்குமம் தடவி, எதையோ முணுமுணுத்துவிட்டு, இதைக் கொண்டுபோய் மாட்டுக் கொட்டிலில் மூன்றடி ஆழக் குழியில் புதைத்துவிட்டு வந்துவிடுகிறேன், மூன்று மணி நேரத்தில்