பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

210 வீரம் இருக்கிறது; பிறந்த நாட்டைக் காப்பாற்ற! ஆனால் ஒரு வேந்தன் இருக்கிறானே, எங்களை எதிரியிடம் காட்டிக் கொடுக்க. படைக்கலத்தைப் பார். தாயே! பார், பஞ்சை நாடு, பராரி நாடு,போர்க்கருவிபெற வழியில்லை என்றுகூறட் டும். கரங்களே துப்பாக்கி - பாய்ந்து சென்று, மாண்டவர் போக, மீதமுள்ளோர் எதிரி மீது பாய்ந்து, குரல் வளையை நெரித்தே கொன்று போடுகிறோம். ஆனால், அரசன் செய்த தென்ன, அருமையான படைக்கலங்கள் என்று கூறி, இந்த "ஓட்டை ஒடிசல்களை', 'வெத்து வேட்டுகளை'க் கொடுத்து, களம் அனுப்பினானே! தாயகமே! நீயே கூறு, யார் நம் எதிரி? எதிரே? இருந்து போரிடும் படையா, எழில் அரண்மனையில் இருந்துகொண்டு, எம்மைக் காட்டிக் கொடுக்கிறானே அந்த வேந்தனா? யார், ஒழிக்கப்படவேண்டும்? போரிடும் படையா? முதுகிலே கட் டாரிகொண்டு குத்துவது போன்ற துரோகமிழைத்த அந்தத் தூர்த்தனா? இறந்து படுகிறோம், தாயே! இறந்து படுகிறோம். எதிரியால் கொல்லப்பட்டவர்களாகவல்ல, எம்மை ஆள் வதற்கென்று ஏற்பட்ட எத்தனால் இந்தக்கதிக்கு ஆளானோம். தம்பி! நாடகமேடையானால், இவ்விதமெல்லாம், 'வீரர் கள் பேசமுடியும்--கொட்டகை அதிரும், பணம் குவியும். இது களம்! ஓட்டை ஒடிசல், வெத்து வேட்டுகள், தொட்டு இழுத்ததும் துண்டாகிப்போகும் கருவிகள்---இப் படிப்பட்ட படைக் கலங்களைக் கொடுத்து, எதிர்த்து வந்த படையுடன் போர் நடாத்தும்படி ஈஜிப்ட் படை அனுப்பப் பட்டது! சித்திரவதைக்கு ஆளாயிற்று! தோல்வி கண்டனர், துயரம் துளைத்தது, வெட்கம் வேலாகக் குத்திற்று! படைக்குத்தேவையான (கருவிகளை'ச் சேகரிந்தளிக்கும் பொறுப்பு மன்னனுடைய உரிமைகளில் ஒன்று! மன்னனோ, அவனுடைய "கோப்பை தூக்கிகள்" "குறிப்பறிந்து கோல மயிலினைக்கொண்டு வருவோர்" ஆகியோரிடம் 'ஆயுதம் வாங்கித்தரும் பணியினை ஒப்படைத்திட, அவர்கள், கொள்ளை அடித்திடும் குணத்தினராதலால், 'வெத்து வேட்டுகளையும் "ஓட்டை ஒடிசல்களையும் கொண்டு வந்து குவித்து, கொற்றவ னிடம் கோடிப் பொன் பெற்றுப் போயினர்! மதியற்ற மன் னன், மக்களின் வரிப்பணத்தால் திரண்ட நிதியைப்பாழாக் கியதுடன், நாட்டின் கண்மணிகளைக் களத்திலே கண்டதுண் டமாகும்படிச் செய்தான் - நாட்டுக்கும் இழி நிலை பிறந்தது! இத்தாலி நாட்டில், அரசு இழந்து, அரசும் ஈடாகாது என்று கூறத்தக்க எழில் படைத்த காதற் கிழத்தி நாரிமனை யும் பிரிந்து, அரண்மனையின் அலங்கோல வாழ்வின் விளை வாகக் கிடைத்த தொங்கு சதை உடனிருந்து குலுங்க, கண்