இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அ. ச. ஞானசம்பந்தன் 59
இலக்குவனும் இராமனிடம் அன்பு கொண்டுள்ளான் எனினும், அதில் ஆணவத்தின் நிழலைச் சில சந்தர்ப்பங் களிலேனும் காணலாம். ஆனால், குகன், பரதன் என்ற இருவருடைய அன்பில் ஆணவத்திற்குச் சிறிதும் இடம் இல்லை. எவ்விதக் கலப்பும் இல்லாத தூய அன்பைக் காணவேண்டுமாயின், இவர்கள் இராமன் மாட்டுக் கொண்ட அன்பைத்தான் காண வேண்டும்.
தாம் காணும் முதல் சந்திப்பிலேயே குகன் பண்
பாட்டின் முடியாகக் காட்சி நல்குகிறான். பரதன் இளமை தொட்டுப் பெறும் வளர்ச்சியை அடுத்துக் காண்போம்.
口