பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. 4, 5. yiii அவர்தாம் புலவர்க்குத் தோழர் பத்தியால் உலகை ஊட்டிப் பரமனுக் கின்பம் செய்யும் வித்தகர் நாயன் மார்கள் - விளம்பிய பதிகம் ஒதி உத்தமராகி இந்த உலகெலாம் உயர்ந்து வாழப் புத்திநூல் அளித்தார் எல்லாப் புலவர்க்கும் தோழர் அம்மா! அவர்தாம் கோதில்லார் படிப்பவர் உயர்தற் கேற்ற படிப்பினை நல்க வல்ல அடிப்படை நூல்கள் ஆக்கி அறிவியல் நூல்கள் ஆக்கி குடிச்செயல் வகைகள் காட்டும்! குணநல நூல்கள் ஆக்கிக் கொடுத்தநம் டாக்டர் சுப்பு ரெட்டியார் கோதில் லாதார். அவர் மனைவிமககள் மகிழ்வுற வாழுகின்றார் - அருந்தமிழ்ப் புலமை மிக்கார்: ஆங்கில மொழியில் வல்லார்: இருமொழிக் கண்ணும் நூல்கள் - இயற்றிடும் ஏற்றம் உள்ளார்; திருவினை முயற்சி யாலே . . . திருவெலாம் நிரம்பப் பெற்றார் மருவிய மனைவி மக்கள் மகிழ்வுற வாழு கின்றார்.