பக்கம்:தம்ம பதம்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேதை ☐ 25

66. புல்லறிவுள்ள மூடர்கள் தாமே தமக்குப் பகைவர்; அவர்கள் பாவ கருமங்களைச் செய்து கொண்டு திரிகின்றனர்; அவை கசப்பான (துன்பக்) கனிகளையே அளிக்கின்றன. (7)

67. எந்தக் கருமத்தைச் செய்தால் பின்னால் மனம் நோகுமோ, எதன் பயனை அழுதுகொண்டே அநுபவிக்க வேண்டியிருக்குமோ, அது நற்செயல் ஆகாது. (8)

68. எந்தக் காரியத்தைச் செய்தால் பின்னால் மனம் இன்பமடையுமோ, எதன் பயனை உள்ளக்களிப்போடு அநுபவிக்க வேண்டியிருக்குமோ, அதுவே நற்செயல், (9)

69. பாவம் பழுத்துப் பயனளிக்காத வரையில் மூடன் அதைத் தேன் என்று விரும்புகிறான்; ஆனால் அது பழுத்துப் பயனளிக்கையில் அவன் (ஆறாத்) துயரை அடைகிறான். (10)

70. மாதக்கணக்காக மூடன் தர்ப்பைப் புல்லின் முனையினால் (துளித்துளியாக) உணவெடுத்து உண்டு வந்தாலும், தருமத்தை நன்கு அறிந்தவர்களின் பதினாறில் ஒருபகுதிக்குக்கூட அவன் ஈடாகமாட்டான். (11)

71. புதிதாய்க் கறந்த பால்போலே, பாவச் செயல் உடனே புளிப்பாக மாறுவதில்லை ; நீறு பூத்த நெருப்பைப் போல் கனன்றுகொண்டேயிருந்து அது மூடனைத் தொடர்கிறது. (12)

72. (பாவ கருமத்தின் தன்மையை ) மூடன் அறியும் போது அவ்வறிவு அவனுக்கு நன்மையா யில்லாததோடு அவனுக்கு இருக்கிற இன்பத்தையும் அழித்து, அவன் தலையையும் பிளக்கிறது. (13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/27&oldid=1357573" இலிருந்து மீள்விக்கப்பட்டது