பக்கம்:தம்ம பதம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் பத்தொன்பது

சான்றோர்

254. பலாத்காரத்தால் தன் காரியத்தை முடிப்பவன் நீதிமான் ஆகான். நன்மை தின்மை இரண்டையும் சீர்தூக்கி முடிவு செய்பவனே ஞானி. (1)

255. நீதியான அஹிம்சை நெறியிலே மற்றவர்களுக்கு வழிகாட்டுவோனே தருமத்தைக் காப்பவன் , மேதாவி, நீதிமான் எனப்படுவான். (2)

256. அதிகமாய்ப் பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான். வெறுப்பும் அச்சமும் இல்லாமலே உபசாந்தியோடு இருப்பவனே அறிஞன் என்று கருதப்படுவான். (3)

257. அதிகமாய்ப் பேசுவதால் மட்டும் ஒருவன் அறத்தை ஆதரிப்பவனாகிவிட மாட்டான். [அற விதிகளைச்] சிறிதளவே அறிந்தவனாயினும், ஒருவன் தன் வாழ்வில் [மன, மொழி, மெய் ஆகிய] உடலால் அறத்தை உணர்த்து, தருமம் தவறாமல் நடந்தால், அவனே அறத்தை ஆதரிப்பவன். (4)

258. தலை நரைத்திருப்பதால் மட்டும் ஒருவன் தேர [1]னாகி விடமாட்டான். அவன் வயது முதிர்ந்திருக்கலாம். ஆனால் பயனில்லாமல் வளர்ந்து வயோதிகமடைந்தவன் என்றே சொல்லப்படுவான். (5)


  1. தேரன்-பெளத்தத் துறவிகளில் முதன்மையானவன்: முதியோன்: பெண்பால்-தேரி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/64&oldid=1381864" இலிருந்து மீள்விக்கப்பட்டது