பக்கம்:தம்ம பதம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 ☐ தம்ம பதம்

370. ஞானமில்லாதவனுக்குத் தியானம் இல்லை; தியானமில்லாதவனுக்கு ஞானம் இல்லை. தியானமும் ஞானமும் சேர்ந்திருப்புவனே நிருவாணத்தின் பக்கம் இருக்கிறான். (13)

371. சாந்தியடைந்த உள்ளத்துடன் ஒரு பிக்கு காலியாயுள்ள ஒரு மனைக்குள் சென்றால், தருமத்தை அவன் மெய்க் காட்சியுடன் தெரிந்திருப்பதன் மூலம், மனிதர் அடைவதற்கு அரிதான இன்பத்தை அடைகிறான். (14)

372. அவன் [உடலின் தோற்றத்திற்குக் காரணமாயுள்ள மூலப் பொருள்களான] ஸ்கந்தங்களின் சேர்க்கையையும், பிரிவையும் பற்றித் தெளியும் போதெல்லாம், இன்பமும் மகிழ்ச்சியும் அடைகிறான், அறிந்தவர்களுக்கு அதுவே நித்தியமான வாழ்வு. (15)

373. அறிவுள்ள பிக்குவுக்கு இதுவே அடிப்படையான முறை; புலன்களை அடக்குதல். திருப்தி, தருமத்தின்படி காத்துக்கொள்ளல், புனித வாழ்வு, பெருமை, ஊக்கம். (16)

374. அவன் யாவர்க்கும் இனியவனாக வாழ்வானாக; தன் கடமைகளைத் திறமையுடன் நிறைவேற்றி வருவானாக; பின்னர் அவன் தனது இன்ப நிறைவாய் துன்பத்தை ஒழித்து விடுகிறான். (17)

375. பிலக்குகளே! வஸ்ஸிகைச் செடி வாடிப்போன மலர்களை உதிர்த்து விடுவதுபோல் நீங்களும் விருப்பு வெறுப்புக்களைக் கை விட்டுவிட வேண்டும். (18)

376. உடலில் அமைதி, பேச்சில் அமைதி, உள்ளத்தில் அமைதியுடன், நிதான நிலைபெற்று, உலகின் ஆசைத் துாண்டுதல்களை ஒழித்த பிக்குவே உபசாந்தி பெற்றவன் என்று கடறப்படுவான். (19)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/88&oldid=1359974" இலிருந்து மீள்விக்கப்பட்டது