பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36



உழைத்ததையும் நல்ல சர்டிபிகெட் பெற்றுள்ளதையும் கூறினன். அதேபோல இதையும் தாங்கள் பயனை எதிர்பாராமல் தான் ஆராய்ச்சி செய்வதாகவும் விளக்கமாக எடுத்துக் கூறினான் தங்கமணி.

'அந்த சர்டிபிகேட் எல்லாம் எங்கே காட்டு பார்க்கலாம்' என்று கேட்டார், புதிதாக வந்த சப்இன்ஸ்பெக்டர். ஆனால் அப்படிக் கேட்பார் என்று தங்கமணி எதிர்பார்க்கவில்லை. "சர் டி பி  ேக ட் என் கைவசம் இல்லை. வேண்டுமானல் என் தந்தை பேராசிரியர் வடிவேலு அவர்களிடமே. ஒருவேளை இருக்கலாம், கேட்டுப் பார்க்கிறேன்” என்று சொல்லி விட்டு, நேராகத் தந்தையிடம் சென்று, விஷ்யத்தை விளக்கிக் கூறினான். 'சர்டிபிகேட் இல்லாமல் அவர் எதுவும் நம்பமாட்டேன் என்கிறார்,ஒருவேளை, நீங்கள் சொன்னல் நம்புவாரோ, என்னவோ' என்று தெரிவித்தான் தங்கமணி, ‘சர்டிபிகேட் என்னிடமும் இல்லை. நான் நேரிலே சொல்லிப் பார்க்கிறேன்.” என்று புறப்பட்டார் போலீஸ் அதிகாரியிடம்.

'மாமா, நீங்கள் சொன்னாலும் அவன் நம்பிக்கை அடையமாட்டான். வீணுக அவமானப்படாதீர்கள்' என்று சுந்தரம் எச்சரிக்கை செய்தான்.

சுந்தரம் எச்சரித்தபடியே நடந்தது. "நீங்கள் பொறுப்புள்ளவர்தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால், எதற்கும் ஒர் ஒழுங்குமுறை வேண்டும் அல்லவா? வேண்டுமானால் உடனே தந்தி கொடுத்து