பக்கம்:தரங்கிணி.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இதனிடையே, சாரதா, தரங்கிணி பின்னித் தொங்க விட்டிருந்த பின்னலை அவிழ்த்துவிட்டுப் பின் அவளுடைய நீண்ட கூந்தலை வாரி அஜந்தாக் கொண்டையை அழகாகப் போட்டாள். அதன் மீது, தோகையை விரித்தாடும் மயில் போல, இரங்கூன் வைரக்கற்களால் இழைக்கப்பட்ட ஜடைப்பில்லேயைப் பொருத்தினுள். காதரீன் மேஜைமீது வாழையிலையில் வைக்கப்பட்டிருந்த பூச்சரங்களிளிருந்து குண்டு மல்லிகையையும் ஜாதிக் கதம்பத்தையும் அரி அரி யாக் எடுத்து, அவள் கொண்டையில் அழகுபடச் செருகி ள்ை. மற்றப் பெண்களையும் எடுத்துச் சூடிக்கொள்ளச் செய்தாள். -

'அக்கா!'

டேவிட் கூப்பிட்ட குரல் கேட்டு, காதரீன் திரும்பி ள்ை. வெளியிலிருந்தவாறே அவன் அவளை நோக்கி ஏதோ சைகை செய்தான். உடனே அவள், அவன் அருகே போனள். அவன் அவள் செவியில் இரகசியமாக ஏதோ சொன்னன். உடனே அவள் முகம் மகிழ்ச்சியால் மலர்ச்சி யுற்றது. "அவர் வந்து விட்டாரா?...... ’ உணர்ச்சியை அடக்கமாட்டாமல் கேட்ட காதரீன், தரங்கிணி இருக்கும் பக்கம் சடக்கெனத் திரும்பிப் பார்த்து விட்டு, உதட்டைக் கடித்துக்கொண்டாள். பின் அவள் ஜோஸப்......” என மெல்ல மேலும் ஏதோ கேட்கத் தொடங்கியவள் நிறுத்திக் கொண்டு, சரி, நீ போ' என்று கூறி அனுப்பிவிட்டு உள்ளே வந்தாள். - r

. "!ஆயிற்ரு.சீக்கிரம் முடியுங்கடி . طلبه» .

காதரின் சொல்லிக்கொண்டே, நிலக் கண்ணுடியில் தெரியும் . தரங்கிணியின் அழகிய தோற்றத்தைப் பார்த் தவாறே.அவளே அணுகினள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/153&oldid=575348" இலிருந்து மீள்விக்கப்பட்டது