36 த ரு ம தி பி கை
இம்மூன்றும் நல்லனவாயின் அவ்வுயிர் செவ்விய கிலேயில் எங் கும் சிறந்து விளங்கும். குடிப்பிறப்பு பரம்பரைக்குணம் என்பன வெல்லாம் இடையிலுள்ளதை அடிப்படையாக் கொண்டு நிற்கின்றன.
இறுதியிலுள்ள பழக்க வாசனேயே மறுபடியும் பிறவிக்கு மூல மாய்ப் பெருகி வருதலால் அதன் நிலைமை எவ்வளவு பொறுப்பில் நிலைத்துள்ளது என்பது தெளிவாம்.
உற்ற பழக்கம் உயிர்க்குறுதி என்னினதன் பெற்றி தெளிக பெரிது. ==
பழக்கத்தை நல்லதாகப் பரிந்து பேணுக என்பது கருத்து.
37. கெட்ட பழக்கம் கெடுநோய் எனவிரைக்
தொட்டி உயிரை உறிதுமால்-எட்ட வருமுன் அறிந்து வரைக வரினே எரிமுன் துரும்பே இடர். (எ)
இ-ள்.
கெட்ட பழக்கம் தியநோய் போல் விரைந்து உயிரைக் கவர்ந்து
கொள்ளும் ; அக்கொடுமையை உணர்ந்து உடனே அதனே ஒழித்து விடுக ; ஒழியாதிருப்பின் எரிமுன் துரும்பாய் அழிவாய் என்றவாறு.
கெடுநோய் என்றது கொடிய தொத்து நோய்களே.
விரைந்து பரந்து உதிரங்களேத் திரித்து உடல்களே ஒழிக்கும் தீய நோய்கள்போல், தீயபழக்கங்கள் உணர்வுகளைக் குலைத்து உயிர்களைக் கெடுத்துவிடும் ஆதலால் இவற்றிற்கு அவை உவமைகளாய் வந்தன.
வரைக-ஒதுக்கித் கள்ளுக. வருமுன் வரைக என்றது. வங்து நுழைந்தபின் யாதும் செய்யமுடியாமை கருதி. வெய்ய நிலை தெளிந்து செய்வன செய்து உய்தி புரிக என்றபடி,
கை கால்கள் அழுகிய தொழு நோயர்களே அருவருத்து ஒதுங்கு வதினும் இழி பழக்கங்களே மிகவும் வெறுத்து ஒதுங்குக என்பதாம். அந்நோய் உடலை ஒட்டி உருவைக் குலைக்கும் ; இது உள்ளத்தைப் பற்றி உயிரைக் கெடுக்கும் என்க. எனவே குட்ட நோயினும் கெட்ட
பழக்கம் கொடியது என்பது புலனும்.
எரிமுன் துரும்பு என்றது அழிவின் விரைவும் தெளிவும் உணர வந்தது. எரி=தீ- எய்தியதை எரித்து அழிப்பது என்பதாம்.