இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறப்புப் பாயிரம்.
புண்ணிய நூல் இதுவென்று புலவரெலாம்
புகழ்ந்தேத்தப் போத மேய
எண்ணியநல் வேதமென யாவருமே
போற்றிவர இனிமை ஓங்கி
விண்ணியலும் மண்ணியலும் விழியெதிரே
தெளிவாக விளங்கி நிற்கக்
கண்ணிய நூல் அருளினான் செகவீர
பாண்டியனாம் கவிஞர் வேந்தே.