694 த ரும தீபிகை. தெரியவே அது தெய்வக் காட்சியாய்த் தேசு மிகுந்து உய்வைத் கருகின்றது. உள்ளம் புனிதமுற எல்லாம் இனிமையுறுகின்றன. ஆதி முதல்வன் என்றது கடவுளே. கால தேச நிகழ்வுகள் யாவும் கடந்து என்.றம் கனி முதல் தலைவனுய் கிலவியுள்ள பாம் பொ ருளின் கிருவருளை உரிமையாக அடைந்து கொள்வதே பிறந்த சீவனுடைய உயர்ந்த பேரும். கடவுள் தரும உருவினர்; கருணை நிலையினர்; இந்தக் குண ர்ேமைகளை மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு மருவுகின்ருனே அவ்வளவுக்கு அவ்வளவு அவன் தெய்வமாய்ச் சிறந்து திகழ் கின்றன். பண்புகள் படிய இன்பங்கள் படிகின்றன. தயையுடையவனது செயல் இயல்கள் என்றும் இதமாய் பாண்டும் இனிமை சாக்து வருதலால் எவ் வுயிர்களும் அவனைத் தாய்ஆகவும் தெய்வம்,ஆகவும் கருதி வாயா வாழ்த்தி வருகின்றன. தன் உள்ளத்தில் அருள் நலம் தோய்த்தவுடனே உலகத்தில் அவன் பாம் பொருள் இனமாய் மதிக்கப் படுகின்ருன். கருணை யுடையவனேக் கருணைக் கடலாகிய கடவுள் தனது இன உரிமை யாத் தழுவிக் கொள்ளுதலால் அவனுடைய மகிமை அளவிட லரியதாய் ஒளி மிகப் பெறுகின்றது. எவ்வுயிரும் பொதுஎனக் கண்டு இரங்கியுட கரிக்கின்ருர் யாவர்? அந்தச் செவ்வியர்தம் செயல் அனைத்தும் திருவருளின் செயல் எனவே தெரிந்தேன் இங்கே கவ்வையிலாத் திருநெறியத் திருவாளர் தமக்கு ஏவல் களிப்பால் செய்ய ஒவ்வியது.என் கருத்தவர் சீர் ஒதிடஎன் வாய் மிகவும் ஊர்வதாலோ. (1) கருணை ஒன்றே வடிவாகி எவ்வுயிரும் தமமுயிர் போல் கண்டு ஞானத். தெருள் நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப் பெருங்தி செலுத்தா கின்ற பொருள் கெறி சற் குணசாங்த புண்ணியர்தம் திருவாயால் புகன்ற வார்த்தை அருள் நெறி வேதாகமத்தின் அடிமுடி சொல் வார்ததைகள் என்று அறைவராலோ, (திரு அருட்பா)
பக்கம்:தரும தீபிகை 2.pdf/303
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை