72. பழி 1731 உயர்ந்த மக்கள் தம் உள்ளமே சான்ருய் ஒழுகி வருவார் என்பதுஉணரவக்கது. மனச்சான்றே அரிய சான்ருண்மை பாம். இத்தகைய உயர் நிலையில் நில்லாது போயினும் இழி நிலையி லும் கூட இல்லாமல் இழிந்து போவது பழி நிலையாய் கின்றது. உயர்ந்தோர் உள்ளமே சான்ருய் ஒழுகி உயர்கின்ருர். இழிந்தோர் அச்சமே ஆசாரமாய் அலமந்து திரிகின்ருர். இந்த இருவகையிலும் சேராமல் ஈனமாய் இழிந்து உழலு பவர் பழியாளராய்ப் பாழ்பட்டு நிற்கின்ருர். நல்ல அறிவுடைய மனிதப் பிறவியை அடைந்தும் மேலும் உயராமல் கீழேபோவது பாழான படுதுயரமாயுள்ளது. கீழ்மை தாழ்மையே தருகிறது. பல்லோர் வெறுத்துப் பழிக்கப்படுவது பழி. என்றது பழி என்னும் மொழிக்குப் பொருளை விளக்கியது. பிழையான வழிகளில் இழிந்து செல்பவரையே உலகர் இகழ்ந்து பேசுகின்ருர். பொது மக்களுடைய வெறுப்புக்கும் இகழ்ச்சிக்கும் ஆளாகாமல் வாழ்பவனே ஆனவரையும் நல்ல ஆளாய் மேன்மையடைந்து நலம் பல பெறுகின்ருன். ■ தான்பிறந்த இல் கினேந்து கன்னேக் கடைப்பிடித்துத் தான்பிறரால் கருதற்பாடு உணர்ந்து---தான்பிறரால் III சாவ என வாழான் சான்ருேரால் பல்யாண்டும் வாழ்க என வாழ்தல் கன்ஆறு. (சிறுபஞ்சமூலம்) f ஒருவன் சிறந்தவனப் வாழ வேண்டிய வகையை இது வரைந்து காட்டியுள்ளது. காட்சி கருதி நோக்கத் தக்கது. தான் பிறந்த குடியை நினைக்து, இழிந்த செயல்களை ஒழிந்து, தனக்கு எவ்வழியும் யாதும் இளிவு நேராகபடி பாதுகாத்து ஒழுகி வருபவனே உயர்ந்த ஆண்மகனப் ஒளி பெறுகின்ருன். இவன் செத்து ஒழிய மாட்டான? என்று பிறர் வெறுத்து வையும்படி ஒருவன் உயிர் வாழலாகாது; இவன் நீண்ட ஆயு ளோடு பல்லாண்டு வாழவேண்டும் என்று சான்ருேர் உவந்து வேண்டும்படி ஒருவன் இனியனப் வாழ வேண்டும்; மனித வாழ்வில் அதுவே புனிதமான பெரிய மகிமை வாழ்வாம். திய காரியங்களைத் துணிக்து செய்பவனேயே பலரும் ". H. இகழ்ந்து பழிப்பர்; அந்தப் பழிகிலேஅவனது பாவத்தை அளக்தி
பக்கம்:தரும தீபிகை 5.pdf/192
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை