எழுபத்தைந்தாவது அதிகாரம். பு: ண் ணி ய ம். - ביבי, כנפיי-סיים== அஃதாவது நல்ல கருமங்களால் நன்கு விளைந்து வரும் கருமம். இருமையும் இன்பம் கரும் புெரு மகிமையுடையது. இம்மைப் பயனப் எழில் செப்துள்ள புகழோடு ஒளி செப்து வருவது ஆதலால் அதன் பின் இது வைக்கப் பட்டது. புகழும் புண்ணியமும் ஒளியும் மணியும் போல் கழுவியுள்ளன. அவ் வுண்மையை உணர்ந்து கொள்ள இவ் வுறவுரிமை ஈண்டு இவ் வண்ணம் இணைந்து பிணைந்து இசைக்து நின்றது. 741. புண்ணியவான் என்னும் புகழே ஒருவனுக்குக் கண்ணிய மான கதியாகும்-எண்ணியதைப் பெற்ருன் பெருமகிமை பெற்ருன் பெருதவன் இ-ள் புண்ணியவான் என்னும் புகழ் ஒருவனுக்கு அமையுமா யின் அது கண்ணியமான கதியர்ம்; தலைமையான அந்த நிலை மையைப் பெற்றவன் அரிய பல மகிமைகளை அடைந்தான்; அதனைப் பெருதவன் பிறந்தும் பிறவாதவனுய் அழிந்தான் என்க. உலக வாழ்வில் மனிதன் பலவகை நிலையால் நிலவி வருகி முன். கருமச் சார்புகளின்படியே காட்சி புரிகிருன். ஆட்சி முறை செப்பவன் அரசன், நீதிநிறை செப்பவன் நியாயாதிபதி; பொரு திறலுடையவன் போர்வீரன், இரவலர்க்கு ஈபவன் வள்ளல்; பொருள் வளமுடையவன் செல்வன், கல்வியறிவுடை யவன் புலவன்; காவியங்கள் செய்பவன் கவிஞன், ஒவியங்கள் புனேபவன் ஒவியன். சீவிய நிலைமைகள் சிந்திக்க வுரியன. இன்னவாறு செயல் இயல்புகளின் சார்பின் வழியே பேரும் சீரும் பெருகி வந்துள்ளன. புனித நினைவுகள் தோய்ந்து இனிய நீர்மைகள் வாய்ந்துவரின் அந்த மனிதன் தனி மகிமை யில் தழைத்துத் தலைமையான நிலைமையில் இனிக நிலவகிான்.
பக்கம்:தரும தீபிகை 5.pdf/296
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை