1896 த ரு ம தி பி கை மன்னன் இன்னவாறு அரச நீதியை அவனுக்கு இனிது போதித் திருக்கிருன். நெறி முறைகளை ஒர்க் து வேங்கர் அரசை கடத்தின் அது வழிமுறையாய் நிலைத்து கெடிது நிலவி வரும்; அவ்வாறு ஆளாராயின் அரசு பாழா யழியும்; அவரும் பழியில் இழிந்து அழிந்து போவர். இவ்வாறு அழிவுகள் சேராமல் விழுமிய கிலே யில் அரசை விழியூன்றிப் பேணுக என மைந்தனுக்கு மன்னன் அறிவுறுத்தி யிருக்கும் அரச நீதிகள் யாரும் கருதி யுனா வுரியன. அரச பதவி எவ்வளவு பொறுப்புடையது; எத்துணை கெறி யோடு கவனித்து நடக்கத் தக்கது என்பன இங்கே உய்த் துணர வந்தன. இனிய சுக போகங்களை நுகர்ந்து இறுமாந்து இருப்பதுதான் அரசு நிலை என்று கருதின் அது கொடிய மட மையாம். தம் கடமையை மறந்த மடமைகளாலேயே அரசுகள் யாவும் அடியோடு அழிந்து படி மறைய சேர்ந்தன. கிடைத்த அ சு கெடிது கிலேத்து வரவேண்டுமானுல் நேர்ந்த தலைவர்கள் நெறிமுறையோடு கின்று கரும நீதிகளைக் தழுவி எவ்வழியும் ஆட்சியைச் செவ்வையாய் கடத்திவரவேண் டும். சிறிது வழுவினும் பெரிய கேடுகள் பெருகிவிடும் ஆதலால் யாதொரு பிழையும் புகாமல் ஆன்ற நெறியோடு ஒழுகி அரசை ஊன்றி உணர்ந்து வருவதே ஆணையாளர்க்கு யாண்டும் கலமாம். உள்ளம் தாப்மையாய் ஒர்ந்து வினே செய், உலகம் வாய்மை யாப் உன்னைத் தேர்ந்து மகிழ்ந்து உரிமை கூர்ந்து கொள்ளும். 756. என்னவகை இன்னல் எதிர்ந்தாலும் தாமேற்று மன்னுயிர்கட் கின்டருள்வார் மன்னவர்-துன்னுகதிர் - காயும் வெயிலெல்லாம் காத்தினிய கன்னிழலே ஈயும் மரம்போல் இனிது. (சு) o இ-ள். வந்து பாய்கிற சுடுவெயிலைத் தான் தாங்கிக் கொண்டு குளிர் நிழலை இனிது தரும் o கனிமரம் போல் அரசர் தனி அமைந்துள்ளனர்; எவ்வளவு இடையூறுகள் நேர்ந்தாலும் அவ்வளவையும் எதிர்த்து நீக்கிக் குடி சனங்களே அவர் இனிது பேணியருளுவர்; அவரது கருமமுறை கரும கிலேயமாம் என்க.
பக்கம்:தரும தீபிகை 5.pdf/357
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை