பக்கம்:தரும தீபிகை 6.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2070 த ரும தி பி கை யுளது. ஞானம் தானம் கல்வி முதலிய விழுமிய நிலைகள் பலவும் விரத்தால் ஒளி பெற்று வருவது இங்கே தெளிவுற்று நின்றது. 807. போராற்றல் நேர்மை பொறுமை தறுகண்மை பேராற்றல் மானம் பெருவாய்மை-ஒராற்றும் குன்ருமல்கிற்கும் குலவீரர் எஞ்ஞான்றும் பொன்ருமல் நிற்பர் புகழ். (எ) இ-ள் போர் ஆற்றும் தீரம் பொறுமை நேர்மை வாய்மை மன ஆறுதி மானம் ஆண்மை முதலிய மேன்மைகள் யாண்டும் குறையாமல் உடையவர் என்றும் அழியாக புகழை அடைந்து எவ்வழியும் ஒளி மிகுந்து உயர்ந்து திகழ்வர் என்க. _ அமைதியாகவும் சுகமாகவும் வாழ விரும்புவது மனித இயல்பு ஆயினும் சமையம் நேரும் போது போராடவும் அவன் உரியவன் ஆகின்ருன். காய் தந்தையரைப் போற்றி மனைவி மக்களைப் பேணி ஒக்கல் சுற்றங்களை ஒம்பித் தான் பிறந்த குடி யை உயர்ந்த நிலையில் சிறந்து திகழச் செய்வது ஒவ்வொரு மக லுக்கும் தனி உரிமையான இனிய கடமையாம். முறையான சிறக்க அறிவுடையனப் மனிதன் பிறந்திருக்க லால் துறைதோறும் அவனுடைய பொறுப்புகள் கோப்ந்த நிற் கின்றன. உற்ற வீட்டுக்கும் உரிய நாட்டுக்கும் பெற்ற அரசுக் கும் ஆள்வினை ஆற்றி ஆகவு புரிய அவன் சேர்ந்திருக்கிருன். சமாதான காலத்தில் அமைதியாய் வாழ்ந்தாலும் கன் காட்டின் மேல் மறுபுலத்தவர் படை எடுத்து வர மூண்டால் அவரைக் தடையற நீக்கிக் தனது அரசுக்கு உதவி புரியும் கடமை ஆண் மகனுப்ப் பிறந்த எவனுக்கும் உரிய உடைமையாய் அமைக் துள்ளது. காலம் இடம் பக்கச் சூழல் அரசுமுறை ஆட்சி நிலை முதலியவற்றிற்குத் தக்கபடி ஒக்க இசைக்து ஒழுகுவதே உலக ஒழுக்கமாய் உற்றிருத்தலால் அவ் வழிகளைக் கழுவி வாழ்வது மனிதனுக்கு விழுமிய கடமையாய் யா ண்டும் மேவி வந்துளது. கன் பொறுப்பையும் உறுப்பையும் குறிப்போடு கூர்ந்து செய்து வருபவன் யாண்டும் சிறப்பெய்தி வருகிறான். கங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/147&oldid=1327532" இலிருந்து மீள்விக்கப்பட்டது