பக்கம்:தரும தீபிகை 6.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2074 த ரு ம தி பி ைக லோர் பெயர் யாண்டும் அழிவின்றி நிலைத்து கிற்பது அதிசய வியப்பை விளைத்து வருகிறது. சத்து நித்தியமாய் நிலவுகிறது. “Strong towers decay, * But a great name shall never pass away.” (Benjamin) வலிய நெடிய கோபுரங்கள் அழிந்து போகின்றன; பெரி யோர் பெயர் என்றும் அழியாமல் உள்ளது” என்னும் இது இங்கே அறிய வுரியது. புகழ் பெற்ற பெயர் உயர்வுற்றுளது. இவ்வாறு நிலையான பேராளரே கலையான சீராளராய் நிலவு கின்றனர். சிறந்த பேர் பிறந்த பேருய் கின்றது. அரிய காரியங் களை ஆற்று வோரே உரிய பேர்களையும் பெரிய சீர்களையும் அடைந்து உலகம் போற்ற ஒளி மிகுந்து கிற்கின்றனர். நாகன் என்பவன் சிறந்த போர் விரன். உயர்ந்த குண நலங்கள் அமைந்தவன். பாண்டிய மன்னனிடம் படைத் தலைவன யிருக்கான். அவ்வேந்தன் பால் பேரன்பு டையவன்; எ வ்வழியும் செவ்வியனுப் பாண்டும் மாருமல் அம்மன்னனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தான். இவனுடைய வீரம் நேர்மை ஈகை முதலிய நீர்மைகளை வியக் து யாவரும் புகழ்ந்தனர். பெட நெடுந்தத்தனர் என்னும் சங்கப் புலவர் இவனே உவக் து பாடினர். குணநலங்கள் மனக்க அப்பாடல் அயலே வருகிறது. ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை மலர்ப்போர் யார்? என வினவலின் மலேங்தோர் விசிபிணிை முரசமொடு மண் பல தந்த 5 திருவிழ் நுண்பூட் பாண்டியன் மறவன் படை வேண்டுவழி வாள் உ தவியும் வினே வேண்டுவழி அறிவு உதவியும் வேண்டுப வேண்டுப வேங் தன் தேஎத்து அசை நுகம் படாஅ ஆண்டகை உள்ளத்துத் 10 தோலா கல் இசை காலே கிழவன் பருந்துபசி தீர்க்கும் கற்போர்த் திருந்துவேல் நாகற் கூறினர் பலரே. (ւ նoւo, 179) இவனுடைய அறிவு விர ம் கொடை நடை முதலிய நிலைகளை இதல்ை அறிந்து கொள்ளு கிருேம், கன் அரசனுக்கு நன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/151&oldid=1327536" இலிருந்து மீள்விக்கப்பட்டது