பக்கம்:தரும தீபிகை 6.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2104. த ரும தீ பி ைக 816. குற்றங்கள் கோடி யுறினும் கொடைஒன்று முற்றி ஒருவன்பால் மூண்டுகின்ருல்-மற்றவெலாம் எல்லோனைக் கண்ட இருள்போல் இரிங்தொழியும் நல்லோன் அவனேகாண் நன்கு. (சு) இ-ன் ஒருவனிடம் குற்றங்கள் கோடி யிருக்காலும் கொடை ஒன்றை அவன் பேணி கின்ருல் அக்குறைகள் எல்லாம் மறைந்து சிறந்த குணவானப் உயர்ந்த திகழ்வான்; ஆதவன் எதிரே இருள்போல் ஈதல் எதிரே இளிவுகள் ஒழிக் து போம் என்க. ஈகை எவ்வகையும் செவ்வையாய் ஒகையே புரிகிறது - கொடை அரிய பெரிய இனிமையுடையது; அதனையுடைய வர் எவ்வழியும் புகழையே அடைகின் ருர். பிழைகளையும் குறை களையும் உலகம் வெறுக்குமாயினும் கொடையாளியிடம் அவற் றை எவரும் மறந்து விடுகின்றனர். மாசுகளை யெல்லாம் மறைத்து மனத்தையே விரிக்கலால் கொடை உயர்ந்த குன மாய்க் கேசு விசியுள்ளது. தாதா மாதா என்பது வேதமொழி. குற்றம் என்றது. காமம் கோபம் செருக்கு முதலிய சிறு மைகளை. மனிதனது பெருமையைக் குறுகச் செய்து சிறுமைப் படுத்துவது எதுவோ அது குற்றம் என வந்தது. சார்ந்த அழுக் கால் உடம்பு அசுத்தமாம், சேர்க்க குற்றத்தால் உயிர் ஊன மாம். மாசுபடிய மணியின் கேசு மழுங்குதல் போல் ஆசு படிய ஆன்ம ஒளி அழுங்குகின்றது. உயிரை ப் பழுது படுத்தும் பிழை கள் பல வழிகளில் மருவி வருதலால் அவற்றிற்கு உரிமையா త్రొT பெயர்கள் பல படிய நேர்ந்தன. சில அயலே வருகின்றன. 'காசும் தவறும் கறையும் களங்கமும் மாசும் வசையும் மறுவும் வடுவும் ஆசும் புகரும் அரிலும் களேயும் ஏசும் ւցիայւն போக்கும் ஏதமும் கறையும் வண்டும் கடவையும் நவையும் மிறையும் பிழையும் விடலும் கரிலும் தோமும் தப்பும் அதுகளும் புரையும் கோதும் செயிரும் மையும் குற்றம்.' (பிங்கலங்தை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/181&oldid=1327568" இலிருந்து மீள்விக்கப்பட்டது