பக்கம்:தரும தீபிகை 6.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. வீ ர ம் 205.7 கரிகால் வளவன் என்பவன் ஒரு சோழ மன்னன். இளஞ்சேட் சென்னி என்னும் அரசனுடைய அருமைத் திருமகன். இவன் இளமையாயிருக்கும் போதே தங்தை இறந்து போனன். தாயா திகள் அர சுரிமையை வலிந்து கவர்ந்து கொண்டார்; இவனைக் கொல்ல மூண்டு அல்லல் பல செய்து சிறைப்படுத்தி யிருந்தார். அக்கக் கொடிய சிறையைக் கடந்து வெளியே வந்து நெடிய பகைவரை கேரே வென்று கொலைத்துத் தனது அரசை அடைந்து அதிசய நிலையில் இவன் ஆட்சி புரிந்தான். இளமையிலேயே வீரத்திறலில் விளங்கியிருந்த இவனது தீர தைரியங்களை வியந்து விர வேந்தன் என்று உலகம் புகழ்ந்து போற்றியது. 'கொடுவரிக் குருளே கூட்டுள் வளர்ந்தாங்குப் பிறர் பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி அருங்கரை கவியக் குத்திக் குழி கொன்று பெருங்கை யானே பிடிபுக் காங்கு நுண்ணிதின் உணர நாடி கண்ணுர் செறிவுடைத் திண்காப் பேறிவாள் கழித்து உருகெழு தாயம் ஊழின் எய்தி' (பட்டினப்பாலை) பகைவர் செய்த சதியிலிருந்து தப்பி வெளியேறி அவரை அடியோடு வென்று இவன் முடி சூடி அரசாண்ட நிலையை இந் நூல் விரிவாக விளக்கியுளது. இந்நூலைப் பாடியவர் உருத்திரங் கண்ணனுர் என்னும் சிறப்பு வாய்க்க சங்கப் புலவர். அக்கவிஞ ருக்குப் பதிஅைறு லட்சம் பொன் இவன் உவந்து தந்தான். "கழுவுசெந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன் பத்தொடு ஆஅ அாருயிரம் பெறப் பண்டு பட்டினப் பாலே கொண்டதும்' (கலிங்கத்துப்பரணி) இவ்விரனுடைய கொடை நிலையை இதல்ை உணர்ந்து கொள்கிருேம். இவன் அரசு புரிந்து வருங்கால் இரு குறுகில மன்னாது பெரிய குடி வழக்கு ஒன்று நேர்ந்தது. இம்முடி மன்னனிடம் அதனைத் தீர்க்க இசைந்தார்; நேரே வந்தார்; வயதில் இளேயணுயிருத்தலால் அரிய திே முறையை இக்குமரன் அ வ்வாறு செய்ய முடியும்? என அவர் திகைத்து கின்ருர்; அக் குறி கட: இவன் உணர்ந்து கொண்டான்; வழக்கை மறுநாள் விசாரிப்பதாக இவன் உரைத்து விடுத்தான்; குறித்தபடி அவர் 258

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/234&oldid=1327625" இலிருந்து மீள்விக்கப்பட்டது