பக்கம்:தரும தீபிகை 6.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. வீ ம் 2063 கிரம்பாக இளைஞன் தன்னந் தனியே நின்ற பெரிய போர் வீரர் பலரையும் முரிய வென்றது அரிய வென்றியாய்த் தெரியவந்தது. விரத்திறல் அதிசய ஆண்மையாய் அமைந்து வருதலால் அது யாவராலும் துதி செய்யப் பெறுகிறது. தம் நாட்டைப் பாதுகாக்க, நீதியை நிலை நிறுத்த, அரசுக்கு ஆதரவாக, உ ரி மையை அடைந்து கொள்ள, இன்னவாறு தகுதியான காரணங் களால் ஆடவர் போராடப் போதலால் அவர் வீரக் குரிசில் களாய்விளங்கி மேலான புகழ்களை அடைந்து கொள்கின்றனர். தருமமும் ஈதேயாம் தானமும் ஈதேயாம் கருமமும் காணுங்கால் ஈதாம்---செருமுனேயில் கோள்வாள் மறவர் தலேதுமிய என் மகன் வாள்வாய் முயங்கப் பெறின். (தகடு ர்.) . எதிரிகளுடைய தலைகளைத் துமித்து என் மகன் வாள் வாயில் மாள நேரின் அதுவே கருமம்; தானம்; கருமம் என ஒரு வீரத்தாய் இவ்வாறு கூறியிருக்கிருள். கொடிய படுகொலை கள் நேர்கின்ற போரை இங்கனம் உரிமையாக் குறித்தது அதன் அருமையும் பெருமையும் மருமமாய்க் கருதி யுணர வந்தது. One to destroy, is murder by law; And gibbets keep the lifted hand in awe; To murder thousands, takes a specious name, . . . . War's glorious art, and gives immortal fame. (Young) "ஒருவனைக் கொல்வது சட்டப்படி கொலை ஆகிறது; அங்ங்னம் கொன்றவன் தாக்குமரத்தில் மரண தண்டனை அடை கிருன்; ஆயிரக் கணக்காக் கொல்லுகிறவன் வீரன் என வியன் பெயர் பெறுகிருன்; போரின் மகிமை பொருவரு கலையாய் அழியாக புகழைக் கொடுக்கிறது' என விரக் கலையை விளக்கி யுள்ள இந்த ஆங்கிலக் கவி ஈங்கு ஊன்றி உணர வுரியது. மனிதரிடம் மருவியுள்ள மேன்மைகள் சமையம் நேரும் போதுதான் வெளியே தெரிய வருகின்றன. வீரர் நிலைகளைப் போர்க் களங்கள் நேரே விளக்கிக் காட்டுகின்றன. செருமுகம் இல்லையேல் பொருமுகம் தெரியாது. மாந்தருள் மன்னன்போல் ாண்புகளுள் வீரம் மகிமை தோய்ந்து உயர்ந்துள்ளது. -*ക്കൂ =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/240&oldid=1327632" இலிருந்து மீள்விக்கப்பட்டது